அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 19 மார்ச், 2014

‘புத்திசாலிப் பெண்’ என்ற இக்கதை கண்டிப்பாக ஆண்களுக்கு மட்டும்!!!

தோழர்களே, இந்தக் கதை உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் ‘சராசரி’ ஆண்மகன். புரியாவிட்டால்.......... மன்னியுங்கள்.


கதை:                     புத்திசாலிப் பெண்

கதாசிரியர்?            ஹி...ஹி...ஹி...

"பக்கத்துத் தெரு சேதுவோட பெண்டாட்டி தாமரை வந்திருந்தா. ரொம்ப நேரம் காத்திருந்துட்டுப் போய்ட்டா” என்றாள் சவீதா.

கம்பெனி வேலையாக, வெளியூர் போய்விட்டுக் காலையில்தான் ஊர் திரும்பியிருந்தான் புவியரசு.

“அவள் எதுக்கு என்னைப் பார்க்கணும்? கேட்டியா?” என்றான்.

“கேட்டேன். நாலு நாள் முந்தி, தண்ணியடிச்சிட்டுத் தெருவோரம் விழுந்து கிடந்த அவளோட கிழட்டுப் புருஷனை வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தீங்களாம். அப்போ அவ வீட்டில் இல்லையாம். நன்றி சொல்லிட்டுப் போக வந்தா.”

“சொல்லிட்டாதானே, அப்புறம் என்ன?”

“உங்களை நேரில் பார்த்துச் சொல்லணுமாம். நாளை வர்றதா சொல்லிட்டுப் போனா.”

பாவம் தாமரை! இளம் பருவத்திற்கேற்ற செழுமையான உடல்வாகும் அழகும் உள்ளவள்; ஒரு கிழட்டு மொடாக் குடியனுக்குக் கழுத்தை நீட்டிவிட்டுப் பெருத்த சோகம் சுமப்பவள். அவளைப் பார்க்கும்போதெல்லாம்,  “கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே நல்ல வேரில் பழுத்த பலா” என்ற பாவேந்தனின் பாடல் வரியை முணுமுணுப்பது புவியரசுவின் வழக்கம்.

சொன்னபடியே, மறுநாள் மாலையில் புவியரசுவின் வீடு தேடி வந்தாள் தாமரை.

வந்ததும் நன்றி சொல்வதற்குப் பதிலாக, “அம்மா இல்லீங்களா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

“அவளோட அம்மாவைப் பார்க்கப் போயிருக்கா. நாளைதான் வருவா. நன்றி சொல்லணும்னு சொன்னயாம். அவகிட்டே சொன்னாப் போதாதா? என்கிட்டே தனியா வேறு சொல்லணுமா?” என்றான் புவியரசு.

“நான் நன்றி சொல்ல மட்டும் வரல. உங்ககிட்ட தனியா ஒரு விஷயம் சொல்லணும்னு வந்தேன்.”

“சொல்லு”

“என் புருஷன் உங்களை ரொம்பவே சந்தேகப்படுறாரு.”

“என்னையா?” கண்களில் வியப்பு விரியக் கேட்டான் புவியரசு.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். என் புருஷனுக்கு உதவுற சாக்கில் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்கிறீங்களாம்” சொல்லிவிட்டு ஆவலுடன் அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் தாமரை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கதையில் இடம் பெற்றுள்ள பெயர்கள் கற்பனையே.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@