அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 24 மார்ச், 2014

பெட்டைக் கோழியும் பெண்ணின் சினை முட்டையும்!!

நீங்கள் நாட்டுக் கோழியின்[பெட்டைக் கோழி] வயிற்றை அறுத்துப் பார்த்திருக்கிறீர்களா? சுமார் 300 முட்டைகள் [எண்ணிக்கை 200 வரை குறையவும் செய்யலாம்] பச்சை மிளகுக் கொடிபோல ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருப்பதைக் காணலாம். இவற்றைப் ‘போட்டு’ முடித்துவிட்டால் அதற்கப்புறம், ஆயுளுக்கும் அந்தப் பெட்டைக்கோழி முட்டையே போடாதாம்.

நம் பெண்களின் நிலையும் இதுதானாம்.

ஒவ்வொரு பெண்ணின் உடம்பிலும் சுமார் 6000 சினை முட்டைகளை உருவாக்கக் கூடிய தாதுக்கள், ரசங்கள், திரவங்கள் உள்ளன. எத்தனை இருந்தும், முழுமையாக உருப்பெறுவது ஏறத்தாழ 400 சினை முட்டைகள்தான்.

முட்டைகள், மாதம் ஒன்று வீதம் ‘ஃபெலோப்பியன் ட்யூப்’ வழியாகக் கருப்பை வாசலுக்கு வந்து ஆணின் உயிரணுவை எதிர்பார்த்துக் காதலோடு காத்திருக்குமாம். உயிரணு கலந்தால் கரு உருவாகிக் கருப்பை வாய் மூடிக்கொள்ளும்; உயிரணு வருகைபுரியாவிட்டாலோ, அதன் வருகை தடைபட்டாலோ, காத்திருந்து நொந்துபோன சினை முட்டை, காலனுக்கு இரையாகும். அதாவது, முற்றிலுமாய் அழிந்துபோகும்.

அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால்..........

மேற்சொன்ன 400 முட்டைகளும் மாதத்திற்கு ஒன்று வீதம் கருப்பை வாசலில் ஆஜராவது நிறைவு பெற்றால், அதன் பிறகு பெண்ணுக்குள் கரு முட்டை உருவாவது அறவே நின்றுபோகிறதாம்.

இந்நிலையில்தான் மாதவிலக்கும் தடைபடுகிறது.

ஹார்மோன் [ஈஸ்ட்ரோஜன்] நிகழ்த்தும் இந்தத் திருவிளையாடல் பெண்ணின் மனநிலையை வெகுவாகப் பாதிக்கிறது. சிலர் ‘ஹிஸ்டீரியா’ எனப்படும் மன அதிர்ச்சி நோய்க்கு உள்ளாகிப் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

ஆண்மகனைப் பொருத்தவரை இப்படிப்பட்ட அவலநிலைக்கு அவன் ஆளாவதில்லை.

90 வயதைத் தாண்டிய தொண்டுக் கிழவனாக இருந்தாலும் உயிரணு உற்பத்தி தடைபடுவதில்லை; தடைபட்டாலும் எவ்வித மனநோய்க்கும் அவன் ஆளாவதில்லை.

ஆண்பெண் படைப்பில் இம்மாதிரியான ‘பிழைகள்’ நேர்வதற்கு எது காரணம்? அல்லது, யார் காரணம்?

இயற்கையா, கடவுளா?

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

சினை முட்டை குறித்த தகவல் இடம்பெற்ற நூல்: ‘கலைஅரசு’ எழுதிய, ‘சித்தர்கள் சொல்லும் திராவிட ஆன்மிகம்’, அருண் பதிப்பகம், கோவை. முதல் பதிப்பு: நவம்பர், 2005.

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo