அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

கர்னாடகா கலவரம்!...தும்பைத் திரித்துவிட்டு வாலைப் பிடித்த கதை!!

கடந்த மூன்று நாட்களாக எனக்கு உடல்நலம் இல்லை. இருந்தும், ஆற்றாமை காரணமாக இந்தப் பதிவை எழுதுகிறேன். வாசியுங்கள்.
கர்னாடகாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கும், அடிக்கடி அங்கு சென்று வருபவர்களுக்கும் தெரியும், நகர் முழுதும் தேடினாலும்[சந்துபொந்துகள் உட்பட] தமிழில் ஒரு பெயர்ப்பலகையைக்கூடக் காண முடியாது என்பது. கன்னடம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இருக்கும். இந்தியிலும் இருக்கக்கூடும். நான் அறியேன்.

இந்த நிலை, மிகப் பல ஆண்டுகளாக நீடிப்பது.

இதற்கு மாறாக, ஒசூர், சேலம், சென்னை என்று தமிழகத்தின் பல ஊர்களில் கன்னடப் பெயர்ப்பலகைகளை நம்மால் காண முடியும். மாறுபட்ட இந்த நிலை, நம் தமிழ் ஆர்வலர்களுக்கும் நம் தலைவர்களுக்கும் தெரியாததல்ல.

இதை வெகு அற்பமான பிரச்சினை என்று கருதாமல், இதை எதிர்த்துச் சிறு போராட்டமேனும் நாம் நடத்தியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை? கண்டனம் தெரிவிப்பது போன்ற சப்பைக் காரணங்களை முன்வைக்காமல், தமிழகத்தில் உள்ள அத்தன கன்னடப் பெயர்ப்பலகைகளையும் அழித்திருந்தால் அந்த மாநிலம் வழிக்கு வந்திருக்கக்கூடும்,

வராவிட்டாலும் ஒன்றும் இழப்பில்லை. அவன் அகற்றினான் ; நாமும் அகற்றிவிட்டோம் என்ற திருப்தியாவது இருந்திருக்கும். இதை உரிய நேரத்தில் செய்திருந்தால், தமிழன் மான ரோசமுள்ளவன் என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஆழப் பதிந்திருக்கும். தவறு செய்துவிட்டோம்.

நம் இப்போதைய முதல்வர், 1991[?]ல் இதே காவிரிநீர்ப் பிரச்சனைக்கு உண்ணாவிரதம் இருந்தபோது, தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரும் கலவரம் மூண்டது.

நம்மவர்கள், நகை நட்டுகளையெல்லாம் விவசாய நிலங்களில் புதைத்துவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று இரவோடு இரவாகத் தமிழகத்துக்கு ஓடி வந்தார்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கு ஆதரவாக இன்று போலவே வெறும் கண்டன அறிக்கைகளை விடுத்ததோடு தம் கடமையை முடித்துக்கொண்டார்கள் நம் தலைவர்கள்.

நம் இனத்தவரின் கோழைத்தனம் அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. அப்புறம்.....

அப்புறம் என்ன இரு இனத்தாரிடையே எழும் சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட [திரைப்பட அரங்கை நொறுக்குவது; தேவாலயங்களில் தமிழில் வழிபடுவதைத் தடுப்பது; பத்திரிகை அலுவலகங்களில் வைக்கப்பட்ட தமிழ்த் தட்டிகளை அகற்றுவது என்று அத்தனைக்கும்   ஆயுதம் தூக்க ஆரம்பித்துவிட்டான் கர்னாடகத்தான்.

ஆரம்பத்தில் கண்டனம் தெரிவிப்பது; அப்புறம் அவனிடம் சரணாகதி அடைவது என்பதை நாமும் வழக்கப்படுத்திக்கொண்டோம்.

நம் தமிழ் இளைஞனை நாய் அடிப்பதுபோல் அவர்கள் அடித்த காட்சி இப்போதும் நினைத்தால் நெஞ்சு நடுங்குகிறது, அதற்குப் பதிலடியாக உணர்ச்சியுள்ள நம் இளைஞர்கள் அவர்களின் வாகனக் கண்ணாடிகளை நொறுக்கினார்கள்.  [அவர்களையும் நம் அம்மா கைது செய்துவிட்டார்கள்.]

அதற்குப் பதிலடியாக, அவர்கள் செய்தது என்ன? ஊடகங்கள் வாயிலாக நம்மவர் எல்லோரும் அறிந்திருப்பார்கள். விருதாச்சலத்தான் அவர்களின் அண்மைப் பதிவின் முகவரியை இங்கே இணைத்திருக்கிறேன்.
http://vriddhachalamonline.blogspot.in/2016/09/sos_12.htmlhttp://vriddhachalamonline.blogspot.in/2016/09/sos_12.html

அன்றைய போர்க்களமோ, இன்றைய இருதரப்பு மோதலோ, எப்படியும் சமரசம் செய்யப்பட்டுவிடும் என்பது உறுதியாதலால், எதிரிக்குப் பலத்த சேதம் விளைவிப்பதில் நாம் முந்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அடுத்த பிரச்சினையில் மோத நேரும்போது  எதிரி நம்மோடு மோதுவதற்கு அஞ்சுவான். இந்த மோதல் உத்தியெல்லாம் நம் தலைவர்கள் அறியாததல்ல. ஆனாலும்....

“கண்டனம்   தெரிவிக்கிறோம்”.
“வருந்துகிறோம்.”
“அந்த அரசு எம் மக்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டும்.”
“நடுவணரசு தலையிட வேண்டும்.”

என்றிப்படியான அறிக்கைகளை விடுவதிலேயே திருப்தி கொள்கிறார்கள்.

எது எப்படியோ, கன்னடக்காரன் தமிழகத்தில் புகுந்து தமிழனைத் தாக்கும் நாள் வெகு தூரத்தில் இல்ல!!!
============================================================================== 
படங்கள்: விருத்தாசலத்தான்   அவர்களின் பதிவிலிருந்து எடுத்தவை. அவருக்கு நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக