சனி, 17 பிப்ரவரி, 2018

பிரதமர் 'மோடி' அவர்களுக்கு ''நன்றி'' சொல்லலாமா? எப்போது?

''சமஸ்கிருதத்தை விடவும் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது'' என்று டெல்லியில் இடம்பெற்ற, மாணவர்களுடனான சந்திப்பின்போது, நம் பிரதமர் மோடி அவர்கள் நம் தமிழ் மொழியைப் பெரிதும் புகழ்ந்துரைத்திருக்கிறார்[தி இந்து, 17.02.2018.].
இத்தகு புகழுரைக்காகவோ, ''வணக்கம்'' என்று தமிழில் சொல்லித் தம் சொற்பொழிவைத் தொடங்குவதற்காகவோ நாம் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோமா எனின், ''இல்லை'' என்பதே என் பதில்.

பேச்சளவில் நம் மொழியைப் புகழ்வது மட்டும் போதாது; இதன் வளர்ச்சிக்கு அவர் தமக்குரிய பங்கைச் செலுத்துதல் அவசியம். 

'சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்குதல் வேண்டும். நடுவணரசின் ஆட்சிமொழியாகத் தமிழையும்[பிற மாநில மொழிகளையும்தான்] தேர்வு செய்தல் வேண்டும்'[ஒரு மொழியில் பேசினால் அதை இன்னொரு மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்ப்புச் செய்வதற்கான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும், அவை பிற நாடுகளில் பயன்பாட்டில் இருப்பதும் அறியத்தக்கது].

இவை இரண்டும் தமிழர்களின் தலையாய கோரிக்கைகள்; நீண்ட நாள் கோரிக்கைகளும்கூட.

இக்கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே மோடி அவர்களுக்கு நாம் மனம் திறந்து நன்றி சொல்வது சாத்தியம் ஆகும்.

இது விசயத்தில் அவர் தாமதமின்றிச் செயல்படுவாரா?!