அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

நீசத் தமிழனும் தேவ தேவ பாஷையும்!

சென்னையில் உள்ள 'இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்[IIT] இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில்[நம் பொன்.இராதாகிருஷ்ணனாரும் கலந்துகொண்டிருக்கிறார்] மரபுப்படி, நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதற்கு மாறாக, சமஸ்கிருத மொழி வாழ்த்து பாடப்பட்டிருக்கிறது. இது நேற்றைய[26.02.2018] தொலைக்காட்சிச் செய்தி http://indianexpress.com/article/india/sanskrit-song-at-iit-madras-hits-wrong-note-sparks-row-5079475/

இந்த அயோக்கியத்தனத்தை, ஸ்டாலின், வைக்கோ, இராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள். 

சில நூறு பேர் மட்டுமே பேசுகிற, 'செத்த மொழி' என்று வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்ட சமற்கிருதத்தை வாழ்த்திப் பாடும் துணிவு ஐஐடியில் ஆதிக்கம் செலுத்தும் 'அவர்களுக்கு' [பதிவுகளில் ஜாதிப்பெயரைக் குறிப்பிடுவதில்லை] வாய்த்திடக் காரணமானவர்கள், இந்த நாட்டை ஆளுகிற காவிகள்தானா?

அல்ல...அல்ல...அல்லவே அல்ல.

தமிழ்ச் சான்றோர்கள் படித்துப்படித்துச் சொல்லியும், கோயில்களில் சமற்கிருதத்தை இன்னமும் வழிபாட்டு மொழியாக அனுமதித்துக்கொண்டிருக்கிற 'நீசத் தமிழ்' பேசுகிற 'நீச'த் தமிழர்களே  காரணம் ஆவர்.

பட்டிதொட்டியெல்லாம் இடிந்து பாழடைந்து கிடக்கும் கோயிலைப் புதுப்பித்துக் கோபுரம் எழுப்பினால், அவர்களைக் கொண்டு, சமற்கிருதத்தில் வேதம் ஓதச் சொல்லிக் குடமுழுக்குச் செய்யும் முட்டாள் தமிழன் காரணம்.

புதிய தொழில் தொடங்கும்போதாகட்டும், புதுமனை புகுவிழா நடத்தும்போதாகட்டும் அவர்களை அழைத்துச் சடங்கு செய்யும் இவனுடைய பேதைமை காரணம்; மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமற்கிருத மொழியும் வேத ஆகமங்களும் கடவுளால் அருளப்பட்டவை என்று அவர்களால் கட்டிவிடப்பட்ட கதையை நம்பும் மூடத்தனம் காரணம்.

தமிழனிடம் இம்மாதிரி மூடக்குணங்கள் நீடிக்கும்வரை, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சமற்கிருதத்தைப் போற்றித் துதிபாடும்  செயலை அவர்கள் தொடர்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.

இனியேனும் தமிழர்கள் சிந்திப்பார்களா? திருந்துவார்களா?!