எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 15 மே, 2018

புரியாத மந்திரமும் பரிதாப மனிதர்களும்!!![வைரவரிக் கவிதை]

நான் கவிதைகளை விரும்பிப் படிப்பதில்லை. படித்தது பிடித்துவிட்டால் எளிதில் மறப்பதும் இல்லை. படியுங்கள்; நண்பர்களையும் படிக்கத் தூண்டுங்கள்.



கோயிலில்
புரியாத மந்திரத்திற்கு
வேண்டிக்கொண்டே நூறு ரூபாயைத்
தட்டில் காணிக்கை செலுத்திய
வெள்ளை வேட்டி
வெளியே வருகையில்.....
'அய்யா......சாமீ
தர்மம் பண்ணுங்கய்யா'வின்
விரித்த துணியில்
சட்டைப்பையில் நோண்டியெடுத்து
ஒரு ரூபாயைப் போட்டுவிட்டு நகர்ந்தபோது
வெளிக்கோபுர மாடமெங்கும்
எதிரொலித்தது
கால் வீங்கிக்கிடந்த
அய்யா.....சாமீயின் குரல்.....
''நீங்க நல்லாருக்கணும் சாமி''
=============================================
கவிதையைப் படைத்த செ.செந்தில்மோகன் அவர்களுக்கும், பிரசுரித்த 'குங்குமம்'[18.05.2018] வார இதழுக்கு என் நன்றியும் பாராட்டுகளும்!

6 கருத்துகள்:

  1. கவிதை வரிகள் மிகவும நன்று ரசித்தேன் என்று சொல்வது பாவம்.

    இந்த கவிதையில் நான் அப்படியே நேரெதிரானவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாகத் தட்டில் நூறு ரூபாய் காணிக்கை செலுத்தியிருக்க மாட்டீர்கள். அதைக் கால் வீங்கிக்கிடந்த பிச்சைக்காரனுக்க்த் தானம் செய்திருப்பீர்கள்.

      நன்றி நண்பரே.

      நீக்கு
  2. நிஜத்தைச் சொல்லும் கவிதை.... இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால்.. லாபம் கிடைக்கும் அல்லது ஏதோ எதிர்ப்பார்ப்போடுதான் எதையும் தானம் செய்கிறார்கள்...

    நான் படிச்சு என் மனதில் நின்ற ஒரு கோட்...

    “பிச்சை போடுவது கூட, நமக்குப் புண்ணியம் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பினாலேதான்”...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். பிச்சைக்காரன் பசியாறட்டும் என்று நினைத்துப் பிச்சை போடுபவர்கள் மிக மிக அரிது.

      நன்றி அதிரா.

      நீக்கு