அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 19 அக்டோபர், 2018

'கடவுள் ஒருவரே' என்று சொன்னவன்.....?

இவ்வுலகில் வழிபடப்படுபவர்கள்.....

ஈஸ்வரன், அல்லா, மகா விட்ணு,  காக்கும் கர்த்தர் என்று பல மதம் சார்ந்த கடவுள்கள்.

முனியாண்டி, முனியப்பசாமி, கருப்புசாமி, ஐயனார், மெய்யனார்னு ஜாதி சார்ந்த கடவுள்கள்.

ஆதி முதல் ஆதிக்கம் செலுத்திவரும் ஆண் கடவுள்கள்.

ஈஸ்வரி, பரமேஸ்வரி, பத்மாவதி, பச்சைநாயகி, மாரியம்மா, காளியம்மா என்று அருள்பாலிக்கும் வகை வகையான பெண் கடவுள்கள். 

ஐயப்பன், மெய்யப்பன், ஆஞ்சநேயன்னு வாலிப வயதிலும் பிரமச்சரியம் காக்கும் கடவுள்கள்.

மலையப்பசாமி, சுப்பிரமணியசாமின்னு இரண்டு பெண்டாட்டி கட்டிய  அதிர்ஷ்டக் கடவுள்கள்.

பக்தியைச் சோதிக்கிறேன் பேர்வழி என்று பக்தனின் உத்தம மனைவியைத் தன் பஞ்சணைக்கு அழைத்த கடவுள்கள்.

கள்ளப் புணர்ச்சிக்கு அலையும் தேவாதி தேவக் கடவுள்கள்.

ஊத்தை உடம்புடன் மண்ணில் நடமாடி இன்று சொர்க்கத்தில் நடமாடுவதாக நம்பப்படும் 'மகா பெரிய' கடவுள்கள்.

இவர்களைப் போல இன்னும் [இங்கே] எத்தனை எத்தனையோ கடவுள்கள்![அவர் ஒருவரே. மக்கள் வெவ்வேறு பெயர்களில் அவரை வணங்குகிறார்கள் என்பது வெற்றுரை; சப்பைக்கட்டு!]

உண்மை இதுவாக இருக்க....

''கடவுள் ஒருவரே'' என்று சொன்னவன்..... 

அறிவிலியா, நம் அனுதாபத்திற்குரியவனா?
*************************************************************************************************