சனி, 20 அக்டோபர், 2018

சபரிமலைப் பிரச்சினைக்கு 'ஆன்மிக அரசியல்வாதி' வழங்கிய தீர்வு!!!

''சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். ஆனால், கோயில் சடங்குகளிலும் ஐதீகங்களிலும் எவரும் தலையிடக் கூடாது'' -இது, சற்று முன்னர்[20.10.2018, நண்பகல் 12.00] ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஆன்மிக அரசியல்வாதி கூறியது[ஆதாரம்: 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் அறிவிப்பு]

செய்தியறிந்து, தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது!!!

அவரளித்த  பேட்டி: https://youtu.be/KOmP_DchWI0

'10 முதல் 50 வரையிலான வயதுக்கு உட்பட்ட பெண்கள்[காம இச்சையைத் தூண்டுபவர்கள்] சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பது ஐதீகம். குறிப்பிட்ட வயதிலான அந்தப் பெண்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. ந்தத் தீர்ப்பு, காலங்காலமாய்க் கடைபிடிக்கப்பட்ட ஐதீகத்தை மீறுவதாகத்தான் உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் ஆன்மிக அரசியல்வாதி[நடிகர் ரஜினி], ஐதீகத்தில் தலையிடக் கூடாது என்கிறாரே, இது எப்படிச் சாத்தியம் என்று குழம்புகிறீர்களா?

குழம்பவேண்டாம்.
ஆழ்ந்து சிந்தியுங்கள். அதி தீவிரமாகச் சிந்தியுங்கள். ரஜினி என்ன சொன்னார் என்பது   உங்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரியும்.

புரியவில்லை என்றால்.....

உங்களின் அறிவுக் குறைபாட்டை எண்ணித் தலைதலையாய் அடித்துக்கொள்ளுங்கள்! நான் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்!!