எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 30 நவம்பர், 2018

திருப்பதி ஏழுமலையானின் பக்தர்களுக்கான ஒரு சிறப்பு இடுகை!!

நான் திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்திப் பதிவுகள் எழுதுவதாக, ஏழுமலையானின் பக்தரும் வலைப்பதிவருமான ஒரு நண்பர் மிகவும் வருத்தப்பட்டு[கண்டித்தல்ல]ச் செய்தி அனுப்பியிருந்தார்.

அவர் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்பது ஒருபுறம் இருப்பினும், அவர் மனம் வருந்துவது என் உள்மனதை உறுத்திக்கொண்டே இருப்பதால்.....

ஏழுமலையான் சாமியானவர், அனுமத் வாகனம், சிம்ம வாகனம், பறவை வாகனம், கல்பவிருஷ வாகனம், சர்வ பூபால வாகனம், குதிரை வாகனம், சூர்யப்பிரபை வாகனம், ஹம்ச வாகனம், முத்துப் பந்தல் வாகனம், பெரிய சேஷ வாகனம், சிறிய சேஷ வாகனம், கஜ வாகனம் என்றிவ்வாறு விதம் விதமான வாகனங்களில் பவனி வந்து பக்தகோடிகளுக்கு அருள்பாலிக்கும் கண்கொள்ளாக் காட்சிகளைப் படம் பிடித்து[கைபேசி சற்றே பழுதடைந்துள்ளதால் படங்கள் இயல்பாக இல்லை] இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

என் செயலால் மனம் வேதனைப்பட்ட நண்பர் மட்டுமல்லாமல், ஏனைய ஏழுமலையான் பக்தர்களும் படங்களைப் பார்த்து உவகை கொள்ளலாம்; புண்ணியம் பெறலாம்.




கஜ வாகனம்.

ஏழுமலையானின் பக்தர்கள் அல்லாத பிறர்.....
''நாங்க கும்பிடுற சாமிக்கெல்லாம் இத்தனை வாகனங்கள் இல்லை. பல கிராமப்புற சாமிகளுக்கு ஓட்டை உடைசலான பழைய சப்பரம்தான் இருக்கு. சிலதுகளுக்கு அதுவும் இல்லை'' என்று புலம்பாமல்[ஹி...ஹி...ஹி!], மேற்கண்ட ஏழுமலையானின் திருவுலாக் காட்சிகளை மீண்டும் மீண்டும் கண்டு களித்து இன்புறுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி.