அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 18 பிப்ரவரி, 2019

விவேகானந்தரை இழிவுபடுத்தும் ஆன்மிகப் பொய்யர்கள்!

விவேகானந்தர் குறித்த, கீழ்க்காணும் தகவல் குறிப்பு ஒரு முன்னணி நாளிதழின் ஆன்மிகப் பக்கத்தில் வெளியானது.  

விவேகானந்தர் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராயினும், சீரிய சிந்தனையாளரும்கூட; மூடநம்பிக்கைகளைச் சாடியவர்; இளைஞர்களின் மனங்களில் தளராத தன்னம்பிக்கையை விதைத்தவர். ''விழிமின்! எழுமின்!!'' என்றெல்லாம் மக்களைத் திரட்டி எழுச்சியுரைகள் நிகழ்த்தியவர்.

அவரை இழிவுபடுத்தும் வகையில் யாரோ ஒரு பொய்யன் கட்டிவிட்ட கதை இன்றளவும் ஊடகங்கள் வாயிலாகப் பரப்புரை செய்யப்படுகிறது.

இராமகிருஷ்ண பரமஹம்சரைத் தம் குருவாக ஏற்பதற்கு முன்னால் அவர் மேற்கொண்டிருந்த துறவறத்தின் உண்மைத்தன்மையைச் சோதிக்க விவேகானந்தர் ஒரு சோதனை நிகழ்த்தினார் என்பது அந்தக் கதை. கதையின் உள்ளடக்கம் என்ன? 

நகல் பதிவை வாசியுங்கள்.
கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளைப் பரமஹம்சரின் பார்வையில் படும்படி வைத்துச் சோதித்தார் என்று எழுதியிருந்தால்கூட, கதை கட்டியவர்களை மன்னிக்கலாம். துறவறத்தைச் சோதிக்க ஒற்றை ரூபாயை பயன்படுத்தினார் என்பது அறியாமையின் உச்சம்.

ஒளித்து வைத்த ஒரு பொருளைத்[இங்கே ரூபாய்] தேடிக் கண்டுபிடிப்பது தேவையற்ற செயல் என்பதோடு, பரமஹம்சர் போன்றவர்களுக்கும்கூட அது சாத்தியமல்ல என்பதை அறியாதவரல்ல விவேகானந்தர்.

இவ்வகை மூடநம்பிக்கை வளர்க்கும் கதைகளை மக்கள் மத்தியில் உலவவிடுபவர்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள்.  

ஆட்சியாளர்கள் தண்டிக்கிறார்களோ இல்லையோ, இம்மாதிரியான ஆன்மிகப் பொய்யர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவது அறிஞர் கடமையாகும்.

விழிமின்! எழுமின்!! க்கான பட முடிவு

IndiBlogger

Your post is on the IndiBlogger homepage.

Dear pasiparamasivam,
Your post விவேகானந்தரை இழிவுபடுத்தும் ஆன்மிகப் பொய்யர்கள்! has been selected for IndiBlogger's Featured Posts, and is on the homepage of IndiBlogger right now!
Tweet this Share this
If you would like to add the 'Featured Post on IndiBlogger' badge to your post, you may get the badge at the following link:
Keep blogging!
The IndiBlogger Team