செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

முதல் இரவும் முதல் உடலுறவும்!!

திருமணம் நிச்சயமான நாள் முதல் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, முதலிரவைப் பற்றிய பயமும், ஆர்வமும் பாடாய்ப் படுத்தும். யார் யார் மூலமாகவோ கிடைக்கிற பூடகமான அறிவுரைகளும், தகவல்களும் மனத்தில் குழப்பங்களை உண்டுபண்ணியிருக்கும். இதனாலயே பல தம்பதியருக்கு முதலிரவு திகிலிரவாகவே அமைந்து விடுகிறது. அந்த இரவு அமைதியாகக் கழிய சில ஆலோசனைகள்.... 
*முதலிரவு என்றாலே, அன்று தான் உடல்களின் சங்கமம் நிகழ்ந்தாக வேண்டும் என்றில்லை. ஓர் ஆணும் பெண்ணும் கணவன் மனைவி ஆகி விட்டாலும்கூடத் தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொள்வது சரியில்லை. 

*முதல் இரவில் உறவைத் தவிர்த்திட,  சுகாதார மற்றும் மருத்துவ அடிப்படையிலான காரணங்களும் உள்ளன. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சடங்கு, சம்பிரதாயங்கள் காரணமாக உடலுறுப்புகள் மிகவும் சோர்வுற்றிருக்கும். தண்ணீர் மாற்றம், கழிப்பறைப்பிரச்சினை, அவசரக் குளியல் என்று பல காரணங்களால் இருவர் உடம்பும் முழுத் தூய்மை பெற்றிரா.

*வீட்டில், திருமண மண்டபத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க நேர்வதால் பிறரிடமிருந்து நோய்கள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த சூட்டோடு உறவை வைத்துக் கொள்வது இருவருக்குமே ஆரோக்கியமானதல்ல. 

*முதல் நாளே உடலுறவைத் துவக்கும் தம்பதியருக்குப் பிறப்புறுப்புகளையோ மூத்திரக்காயையோ பாதிக்கும்  நோய்கள் தாக்குவதற்கான  வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, அவசரக் கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் உறவு கொள்ளுதல் தவறாகும்.

*நிறைவான உடலுறவு சுகம் அளிப்பதற்கான முழுத் தகுதியும் தனக்கு உள்ளது  என்பதை நிரூபித்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும். அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிகமான பதற்றம் இருக்கும். பதற்றத்துடன் உறவு கொள்ளும் போது ஆணுக்கு மிக விரைவில் விந்து வெளியேறிவிடுதல் பெரும்பாலும் நிகழும். அதன் விளைவாக, முதல் இரவிலேயே இருவருக்குள்ளும் அவநம்பிக்கை உருவாவதற்கான சாத்தியமும் அதிகம். அது, ஆபத்தான பின்விளைவுகளுக்குக் காரணமாக அமையலாம்.

*முதலிரவுச் சந்திப்பில் இருவரும் தத்தம் விருப்பு வெறுப்புகளைப் பகிரலாம்; குடும்பச் சூழ்நிலை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம். இல்லற வாழ்வில் இடம்பெறும் பொதுவான பிரச்சினைகள் குறித்துப் பேசலாம்.

*பேசி முடித்ததும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெடுத்துக் கொள்வதே நல்லது. 

*தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடுவதே உகந்தது. ஊட்டிவிடுவதும் எச்சில் பண்டங்களைப் பகிர்வதும் இச்சையை தூண்டிவிடும் என்பது அறியத்தக்கது.

*வெறும் உள்ளங்கை ஸ்பரிசமே போதும்[அதுவும் கட்டாயமில்லை]. அதுவே ஓராயிரம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்; உறவைப் பலப்படுத்தும். ஒரே படுக்கையில் படுத்தாலும், முத்தமிட்டுக் கொள்ளாமலும் உடலுடன் உடல் உரசாமலும் இருப்பது மிகவும் அவசியம்.  

*கணிசமான நாட்கள் மனம் திறந்து பேசிப் பழகி, இருவருக்குமிடையேயான தயக்கங்கள், கூச்சங்கள் தகர்க்கப்பட்ட நிலையில், பதற்றத்திற்குச் சிறிதும் இடம்தராமல், உடலுறவு இச்சை  கிளர்ந்தெழும்  நிலையில் புணர்தலைத் தொடங்கலாம்.

*உடலுறவுக்கான நேரம் மனதுக்கு இதமளிப்பதாக இருந்தால் போதும். அது இரவா, பகலா என்பதெல்லாம் முக்கியம் அல்ல.
------------------------------------------------------------------------------------------------------------------
உதவிக்கு நன்றி: http://viyapu.com/news_detail.php?cid=5710#sthash.oHZHI9Zg.dp
இப்பதிவு indiblogger முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.