பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 10 மே, 2019

'அந்த' 80% 'இந்தி'யர்கள் இந்தி படிக்கவில்லையா?!?!

'தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழில், உணவு விடுதி, சிறிய கடைகள், பேரங்காடிகள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை மையங்கள் என்று பல்வேறு இடங்களிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில்[80%] வேலை பார்க்கின்றனர்' -இது இன்றைய 'தமிழ் இந்து'[10.05.2019] நாளிதழ்ச் செய்தி.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிலிருந்து இந்தியை வளர்த்தெடுக்கவும் இந்திய நாட்டை 'இந்தி' நாடாக்குவதற்கும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறது இந்திய அரசு. இந்தி படித்தால் எளிதாக[குறிப்பாக வட மாநிலங்களில்] வேலை கிடைக்கும்; சொகுசாக வாழலாம் என்று பரப்புரையும் செய்யப்பட்டது/படுகிறது. ஆனால், இந்தி மாநிலத்தவர் இங்கு வேலை தேடி வருகிறார்களே, அது ஏன்?

அவர்கள்[தமிழ்நாட்டில் கட்டுமானம் முதலான அடிமட்டத் தொழில்களில் ஈடுபடும் இந்தியாவின் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்] இந்தி படிக்கவில்லையா? படிக்குமாறு தூண்டப்படவும் இல்லையா? படித்தும் வேலை கிடைக்கவில்லையா?

அங்கு நிலவும் கடுமையான போட்டியில், சிறப்பாகப் படித்துத் தேறியவர்கள் படித்தவர்களுக்கான அத்தனை காலி இடங்களையும் நிரப்பிவிடுவதால் இவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வயிற்றுப்பாட்டுக்கு வேறு வழியே இல்லாமல் இங்கு வந்து குவிகிறார்களா?

இந்திக்காரர்கள் இங்கு வேலை தேடி வருவது இருக்கட்டும், அவர்களால் இன்று நிரப்பப்பட்டுள்ள 80% இடங்களில் முன்பு வேலை பார்த்தார்களே தமிழர்கள், அவர்களெல்லாம் இப்போது என்ன செய்கிறார்கள்?

என்ன செய்கிறார்கள்?! என் பதில்.....

இந்தி படித்து வட மாநிலங்களுக்கு வேலை தேடிப் போயிருக்கிறார்கள்!ஹி...ஹி...ஹி!!!
==================================================================================
நன்றி: 'வினவு'









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக