பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 14 மே, 2019

கொலைக்கும் தீவிரவாதத்திற்கும் என்ன வேறுபாடு?!

''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்னும் இந்துதான்'' என்று 'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல்ஹாசன் ஒரு கருத்து வெடியைக் கொளுத்திப் போட, காரசாரமான கருத்து மோதல் இங்கு நடைபெறுகிறது.
''கோட்சே, ஆர்.எஸ்.எஸ் என்னும் அமைப்பில் பயிற்சி பெற்றவர். ஓர் அமைப்பின் தூண்டுதலால் நடைபெற்றது காந்தி கொலை என்பதால், கோட்சே திவிரவாதிதான்'' என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி['இந்து தமிழ்' 14.05.2019].

தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் ''ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத இயக்கம். அதனோடு தொடர்புகொண்டிருந்த கோட்சேயும் ஒரு தீவிரவாதிதான்'' என்னும் பொருள்பட அறிக்கை தந்திருக்கிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, ''கோட்சேவால் காந்தி கொலை செய்யப்பட்டது உண்மைதான். இது ஒரு கொலை மட்டுமே''[கொலைக்கும் தீவிரவாதத்திற்கும் இடையிலான வேறுபாடு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை] என்கிறார்.

பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா கமல்ஹாசனைக் கடுமையாகத் தாக்கி அறிக்கை விட்டிருக்கிறாரே அன்றி, கொலைக்கும் தீவிரவாதத்துக்குமான வேறுபாடு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.

தமிழிசையின் கருத்துப்படி, கோட்சே காந்தியைக் கொன்றது ஒரு கொலைச் செயல் மட்டுமே. ஒரு இஸ்லாமியன் காந்தியைக் கொன்றிருந்தால், அது.....???
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக