எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 16 ஜூன், 2019

கவிதை சிறிது! தத்துவம் பெரிது!!

கடவுள். ஆன்மா, சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்பன குறித்த வறட்டு வேதாந்தங்களைப் புறக்கணித்து, மனிதர்களின் பலனவீனங்களைப் பட்டியலிட்டுச் சிந்திக்கத் தூண்டும் படைப்பு இது; 'தமிழில் சில முதலிதழ்கள்'[நர்மதா பதிப்பக, சென்னை. முதல் பதிப்பு: மே 2011] என்னும் நூலில் இடம்பெற்ற ஒரு முத்து இது.

படித்துப் பயனடைவீர்!

#உலகம் என்பது வாடகை வீடு -அதில்
ஒவ்வொருவருமே குடித்தனக்காரர்
பலரும் வருவார் பலநாள் வாழ்வார் -தான்
பழகிடும் வீட்டில் பற்று வைப்பார்.

உடும்பைப் போலவே ஒட்டிக் கொள்வார் -இந்த
உலக ஆசையில் சிக்கித் தவிப்பார்
குடும்பம் காண்பார் குழந்தைகள் பெறுவார் -பொருள்
கோடி கோடியாய்க் குவிந்திடச் செய்வார்.

நிரந்தரம் வாழ்வென நம்பி இருப்பார் -தனக்கு
நிம்மதி வேண்டிக் கோயில் சுற்றுவார்
சரிந்திடும் வாழ்வின் மறைபொருள் உணரார் -வீண்
சாகசம் புரிந்து சகதியில் உழல்வார்#

[படைத்தவர்: கவிஞர் பொன். அய்யனாரப்பன்]

=========================================================================