எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 16 ஜூன், 2019

கவிதை சிறிது! தத்துவம் பெரிது!!

கடவுள். ஆன்மா, சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்பன குறித்த வறட்டு வேதாந்தங்களைப் புறக்கணித்து, மனிதர்களின் பலனவீனங்களைப் பட்டியலிட்டுச் சிந்திக்கத் தூண்டும் படைப்பு இது; 'தமிழில் சில முதலிதழ்கள்'[நர்மதா பதிப்பக, சென்னை. முதல் பதிப்பு: மே 2011] என்னும் நூலில் இடம்பெற்ற ஒரு முத்து இது.

படித்துப் பயனடைவீர்!

#உலகம் என்பது வாடகை வீடு -அதில்
ஒவ்வொருவருமே குடித்தனக்காரர்
பலரும் வருவார் பலநாள் வாழ்வார் -தான்
பழகிடும் வீட்டில் பற்று வைப்பார்.

உடும்பைப் போலவே ஒட்டிக் கொள்வார் -இந்த
உலக ஆசையில் சிக்கித் தவிப்பார்
குடும்பம் காண்பார் குழந்தைகள் பெறுவார் -பொருள்
கோடி கோடியாய்க் குவிந்திடச் செய்வார்.

நிரந்தரம் வாழ்வென நம்பி இருப்பார் -தனக்கு
நிம்மதி வேண்டிக் கோயில் சுற்றுவார்
சரிந்திடும் வாழ்வின் மறைபொருள் உணரார் -வீண்
சாகசம் புரிந்து சகதியில் உழல்வார்#

[படைத்தவர்: கவிஞர் பொன். அய்யனாரப்பன்]

=========================================================================