எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 30 ஜூன், 2019

மலரும் மணமும்!

அதோ ஒரு பூ.

ஒரு முறை அதைக் கடந்து போனேன்;

மீண்டுவந்து 

பறித்து முகர்ந்தேன்;

தரையில் போட்டு மிதித்தேன்.

சிறு சிறு துகள்களாக்

கிள்ளிக் கிள்ளி வீசினேன்.

பொறுக்கி எடுத்து நசுக்கினேன்;

கசக்கினேன்.

என்ன செய்தும்.....

அதை முகர்ந்தபோது

கமகமத்து மணம் பரப்பியது.

பெற்ற தாயின் நினைப்பு வந்தது!
==================================================================================
''சிற்றகல்'' என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து[கண்ணதாசன் பதிப்பகம்; முதல் பதிப்பு: 2013] சுட்டு, சில மாற்றங்களுடன் பதிவு செய்திருக்கிறேன். கவிதை படைத்த 'நாகூர் ரூமி'[க்கு நன்றி] என்னை மன்னிப்பாராக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக