அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 30 ஜூன், 2019

மலரும் மணமும்!

அதோ ஒரு பூ.

ஒரு முறை அதைக் கடந்து போனேன்;

மீண்டுவந்து 

பறித்து முகர்ந்தேன்;

தரையில் போட்டு மிதித்தேன்.

சிறு சிறு துகள்களாக்

கிள்ளிக் கிள்ளி வீசினேன்.

பொறுக்கி எடுத்து நசுக்கினேன்;

கசக்கினேன்.

என்ன செய்தும்.....

அதை முகர்ந்தபோது

கமகமத்து மணம் பரப்பியது.

பெற்ற தாயின் நினைப்பு வந்தது!
==================================================================================
''சிற்றகல்'' என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து[கண்ணதாசன் பதிப்பகம்; முதல் பதிப்பு: 2013] சுட்டு, சில மாற்றங்களுடன் பதிவு செய்திருக்கிறேன். கவிதை படைத்த 'நாகூர் ரூமி'[க்கு நன்றி] என்னை மன்னிப்பாராக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக