எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 30 ஜூன், 2019

மலரும் மணமும்!

அதோ ஒரு பூ.

ஒரு முறை அதைக் கடந்து போனேன்;

மீண்டுவந்து 

பறித்து முகர்ந்தேன்;

தரையில் போட்டு மிதித்தேன்.

சிறு சிறு துகள்களாக்

கிள்ளிக் கிள்ளி வீசினேன்.

பொறுக்கி எடுத்து நசுக்கினேன்;

கசக்கினேன்.

என்ன செய்தும்.....

அதை முகர்ந்தபோது

கமகமத்து மணம் பரப்பியது.

பெற்ற தாயின் நினைப்பு வந்தது!
==================================================================================
''சிற்றகல்'' என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து[கண்ணதாசன் பதிப்பகம்; முதல் பதிப்பு: 2013] சுட்டு, சில மாற்றங்களுடன் பதிவு செய்திருக்கிறேன். கவிதை படைத்த 'நாகூர் ரூமி'[க்கு நன்றி] என்னை மன்னிப்பாராக. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக