எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 1 ஜூலை, 2019

திருப்பதியில் ஓர் அதிசயம்!



'பிரமிக்க வைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்' என்கிறது பக்தி நெறி பரப்பும் தமிழ்ப் பருவ இதழ் ஒன்று.

காலியாக வைக்கப்படும் அதி பிரமாண்ட உண்டியல் ஒரே நாளில் நிறைந்துவிடுகிறதாம். 

வேறு உண்டியல் வைத்து அதுவும்கூட நிரம்பிவிடக்கூடும்.

நேர்ந்துகொள்ளும்போதே உண்டியலில் பணமோ நகையோ போடுபவர்கள் உண்டு. கோரிக்கை நிறைவேறிய பிறகு காணிக்கை செலுத்துவோரும் உண்டு. இரண்டில் எது முன்னிலை வகிக்கிறது என்பதை நாம் அறியோம்.

எது எப்படியோ.....

தனக்கான உண்டியலை நாள்தோறும் நிரப்பிவிடுகிறார் ஏழுமலையான். உலகெங்கும் ஆயிரக்கணக்கில் கடவுள்கள் தத்தம் பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது ஏன் சாத்தியப்படவில்லை? 

ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக