எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 1 ஜூன், 2019

நான் ஏன் தமிழ்மணத்தில் என் பதிவுகளை இணைப்பதில்லை?!

காரணங்கள்.....

ஒன்று:
நாம் எழுதும் பதிவுகளில் பிழைகள் நேர்வது இயல்பு. பிழைகளை முற்றிலுமாய் நீக்குதல் அத்தனை எளிதல்ல எனினும், பிழைகளைக் களையும் எண்ணம் சில பதிவர்களுக்குக் கிஞ்சித்தும் இல்லை.

இரண்டு:
அரசியல் காழ்ப்புணர்வுடன் மிக மிக அநாகரிகமாக, மனம்போன போக்கில் எழுதித் தள்ளும் பதிவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது.

மூன்று:
எத்தனை முறை படித்தாலும் புரியவே புரியாத உள்ளடக்கங்களைக் கொண்ட இடுகைகளும் தமிழ்மணத்தில் இடம்பிடிக்கின்றன.

நான்கு:
தமிழ் வளர்க்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்மணம் திரட்டியில். தமிழ் மொழி, இனம், இவற்றின் முன்னேற்றம் போன்றவை  குறித்த பதிவுகள் இணைக்கப்படுதல் வரவேற்கத்தக்கது. இவற்றிற்குத் தொடர்பே இல்லாத ஆங்கிலத்திலான பதிவுகளும் இடம்பெறுகின்றன.

ஐந்து:
வருமானம் ஈட்டுவதற்காகத் தமிழ்மொழிப் பதிவுகளுக்கும் விளம்பரங்களை வழங்குகிறது[சிலவற்றிற்கு மட்டும்] கூகுள். இதன் விளைவாக, வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, நாளிதழ்ச் செய்திகளையே மனம்போன போக்கில் பதிவாக்கித் தமிழ்மணத்தில் இணைக்கிறார்கள் சிலர்.

மேற்கண்டவை[இவை போதும்], தமிழ்மணத்தில் என் பதிவுகளை நான் இணைக்க விரும்பாததற்கான காரணங்கள் என்று நினைக்கிறீர்களா? 

அல்ல...அல்ல...அல்லவே அல்ல. பின்னே?

தமிழ்மணம் என் பதிவுகளை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை['ஏன்?' என்பது தமிழ்மணம் நிர்வாகிகள் மட்டுமே அறிந்த ரகசியம்]. அதனால் நானும் இணைக்க முயல்வதில்லை என்பதே உண்மைக் காரணம்.

ஹி...ஹி...ஹி!
==================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக