அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 2 ஜூன், 2019

பேய்களுக்குக் 'கை விரல்' காணிக்கை!!!

ஐம்புலன்களாலோ ஆறிறிவின் துணையாலோ இந்நாள்வரை நிரூபிக்கப்படாத கடவுளை நம்பியதன்[அனுமானத்தால்] விளைவு, ஆவி, பூதம், பேய், பிசாசு என்று மூதாதையரால் அனுமானிப்பப்பட்ட எதையெதையோ நம்பி இன்றளவும் சீரழிந்துகொண்டிருக்கிறது மனித இனம்.

கடவுளை/கடவுள்களைப் போற்றித் துதிபாடி, விழாக்கள் எடுத்துக் கொண்டாடிப் பூரிக்கும் மனிதர்கள், பேய் முதலானவற்றைத் தீங்கு பயப்பவை என்று நம்பியதால் அவற்றிற்குக் கோயில் கட்டுவதோ விழாக்கள் எடுப்பதோ இல்லை. ஆனாலும்.....

அவற்றிற்கு, கடவுள்களுக்குச் செலுத்துவது போலவே காணிக்கைகள் செலுத்தும் வழக்கத்தை உருவாக்கினார்கள்.

இன்றும்கூட, சில கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் 'பேய் ஓட்டும்'[பெண்களைப் பிடித்த பேய்களை விரட்டுதல்] நிகழ்ச்சிகள் இடம்பெறுவதைக் காணலாம். பேய்களுக்கும் பிடித்தமானவையாகக் கருதப்படும் மது, இறைச்சி போன்றவற்றைப் பூசாரிகளிடம் தொடர்புடைய மக்கள் வழங்குவது உண்டு. பேய் பிடித்த பெண்கள் காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட மதுவை அருந்துவதும் புலாலை உண்பதும் வழக்கத்தில் உள்ளது.
இது விசயத்தில், இந்தோனேசியாவில் உள்ள சில இன மக்கள் பேய்களால் தங்களுக்குத் தீங்குகள் உண்டாகாதிருக்க, பெண்களின் விரலைக் காணிக்கையாக்கும் வழக்கம் உள்ளதை இதழ்கள் வாயிலாக அறிய முடிகிறது.

நேற்றைய[02.06.2019] தினகரன் இதழில் வெளியான ஒரு தகவல் குறிப்பின் நகல் படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக