அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 6 ஜூன், 2019

பதிவர் 'அம்பி' கிருஷ்ணமூர்த்தி[s]க்கு ஆயிரம்கோடி நம்ஸ்காரங்கள்!!!

இந்தப் பதிவை எழுத நேர்ந்ததற்காக, சமற்கிருதத்தைப் புறக்கணித்துத் தமிழுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மறைந்த உ.வே சாமிநாத அய்யர் வழிவந்தவர்களிடமும், மனப்பூர்வமாய் இன்று தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் 'தமிழ் இந்து' நாளிதழ் நிறுனத்தார் போன்றவர்களிடமும் என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்மணத்தின் மூலம் இன்று பெரிதும் பிரபலமடைந்திருக்கும் பதிவர்களில் முன்னணியில் இடம்பிடித்திருப்பவர், '[சு]வாசிக்கப் போறேங்க'   என்னும் தளத்தில் அனல் பறக்க அரசியல் பதிவுகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கும் [அம்பி]கிருஷ்ணமூர்த்தி.s அவர்கள்.

தன் பரம்பரை எதிரிகளான திராவிடக் கட்சிக்காரர்கள் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகும்வகையில், 'நாய்கள்', 'ஓநாய்கள்', 'விபச்சாரிகள்' போன்ற சொற்களால் இவர் விளாசித் தள்ளுவதைப் பார்க்கும்போது, ''அடேங்கப்பா, எத்தனை தைரியசாலி இந்த அம்பி!'' என்று வியக்கத் தோன்றுகிறது.

திராவிட இயக்கத்தவர்கள் இவரின் அரசியல் எதிரிகள் என்றால், ''நான் தமிழன்'', ''தமிழன்டா'' என்று சொல்பவர்களெல்லாம் இவரின் 'இனப் பகைவர்கள்' ஆவார்கள். திராவிடக் கட்சிக்காரர்களை அயர்ச்சி சிறிதுமில்லாமல் அடுத்தடுத்து வெளியிடும் பதிவுகள் மூலம் அதிர்ச்சிக்குள்ளாக்கும் இவர், சந்தடி சாக்கில் தமிழின உணர்வாளர்களையும் சாடுவதை  வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார்.

தமிழப் பற்றாளர்களை இவர் கிண்டலடிப்பது, மேலோட்டமாக இவரின் பதிவுகளைப் படிப்பவர்களுக்குப் புரியாது. அத்தனை நுணுக்கமாய்த் தாக்குதல் தொடுப்பதில் வல்லவர் இந்த 'அம்பி' கிருஷ்ணமூர்த்தி.

இன்று [06.06.2019] இவர் தமிழ்மணத்தில் இணைத்துள்ள பதிவின் தலைப்பு.....

ஏட்டிக்குப் போட்டி! அதுவும் #தமிழேண்டா இஷ்டைலில்!http://suvasikkapporenga.blogspot.com/2019/06/blog-post_40.html


[தமிழில், 'ட' எழுத்தை முதலாவதாகக் கொண்ட சொற்களின் முன்னால் 'இ' சேர்ப்பது மரபு அல்லவா? அதைக் கிண்டலடிக்கும் வகையில் 'இஷ்டைல்' என்று எழுதுகிறார் வம்புதும்பு பேசுவதில் கில்லாடியான இந்த அம்பி கிஷ்ணமூர்த்தி.
#நரேந்திர மோடி அமைச்சரவையில் மோடிக்கு அடுத்த இடத்தில் யார் என்ற கேள்விக்கு விடைகிடைத்து விட்டதாக தி டெலிகிராப் நாளிதழ் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது இப்படி...

என்றிவ்வாறாக, டெலிகிராஃப் நாளிதழை விமர்சனம் செய்யும் இந்த அம்பி [அதிமேதாவித்தனத்தில் ஹெச்.ராஜாவின் தம்பி], தமிழேண்டா இஸ்டைலில் என்றதன் மூலம் தமிழன்டா என்று சொல்லிப் பெருமைப்படும் தமிழர்களெல்லாம் முட்டாள்கள், அயோக்கியர்கள், இளிச்சவாயர்கள் என்கிறார்.

உண்மையில், இந்த அம்பி மகா மகா மகா மகா மகா புத்திசாலிதான். தமிழ்நாட்டில் தி.மு.க.அணி வென்றது போல மத்தியில் காங்கிரஸ் அணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருந்தால், 'இப்படி எழுதினால் என்னவெல்லாம் பரிசுகள் கிடைக்கும்' என்பது இந்த அம்பிக்குப் புரிந்தே இருக்கும். ஆனால் வெற்றி பெற்றவர்கள் அம்பியின் அபிமானக் கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லவா?

யாரை எப்படித் திட்டி எழுதினாலும் ராஜாதிராஜரான ஹெச். ராஜா அண்ணனும்  இந்துத்துவா ஆதரவுக் கட்சிக்காரர்களும் தன்னைப் பாதுகாப்பார்கள் என்பதால் அம்பி புகுந்து விளையாடுகிறார்.

கொஞ்சமும் எதிர்பாராத வகையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அம்பி அடுத்த வினாடியே அந்த ஆட்சியாளர்களின் ஆதரவாளராக மாறிவிடுவார் என்பதும் அறியத்தக்கது.

உண்மையில் 'அம்பி'கிஷ்ணமூர்த்தி உலகமகா புத்திசாலிதான். அவரிடம் கற்றுக்கொள்வதற்குரிய சங்கதிகள் நிறைய உள்ளன.
==================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக