பக்கங்கள்

திங்கள், 29 ஜூலை, 2019

சிந்தனைக்கு எல்லை உண்டா?!

#விஞ்ஞானி ஐன்ஸ்டைன் காகிதத்தில் கணக்குப் போட்டுத்தான் ஒப்புமைத் தத்துவத்தைக் கண்டறிந்தார். அவர் சொல்லியுள்ள ஒரு கருத்துரை நம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. அது.....‘ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் நான் சிந்தித்தேன். அதற்குப் பிறகு என் மனம் திடீரென்று எங்கோ தாவிச் சென்று இந்தத் தத்துவத்தைக் கண்டறிந்தது#
மனம் க்கான பட முடிவு
‘மனோசக்தியின் அற்புத ஆற்றல்’[ராஜி புத்தக நிலையம், நாகப்பட்டினம்; முதல் பதிப்பு: 2015] என்னும் தம் நூலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார் பி.சி.கணேசன் என்னும் எழுத்தாளர். ஐன்ஸ்டைனின் கூற்றுக்கான ஆதாரம் எதையும் நூலாசிரியர் காட்டினார் அல்லர்.

ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் விஞ்ஞானி சிந்தித்தார் என்கிறார் பி.சி.கணேசன். அதென்ன குறிப்பிட்ட எல்லை? சிந்திப்பதற்கு எல்லையோ வரம்போ உண்டா? இல்லையே. அப்புறம் எப்படி ஒரு எல்லைவரைதான் சிந்தித்ததாகச் சொன்னார்?

‘மனம் தாவிச் சென்றது’ என்பதும் விவாதத்திற்குரியது.

நம்மை முற்றிலுமாய் இயக்குவதும் சிந்திக்க வைப்பதும் மூளைதான். மனம் என்று ஒன்று இருப்பதே இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அது தாவிச் செல்வது எப்படி?

ஆக, ஐன்ஸ்டீனின் கூற்றுக்குப் போதிய விளக்கம் தராததோடு உரிய ஆதாரங்களையும் இணைக்காதது பெரும் தவறு ஆகும்.

“நான் விண்வெளியிலிருந்து எண்ணங்களைப் பெறுவதுண்டு” என்று விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னதாகவும் இதே நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கட்டுரை ஆசிரியர். இதற்கும் ஆதாரம் ஏதும் தரப்படவில்லை. விண்வெளியிலிருந்து பெறுவது குறித்த விளக்கமும் இல்லை.

எதையாவது எழுதிப் பிரபலம் ஆகவேண்டும் என்று நினைக்கிற நம் எழுத்தாளர்களில் பெரும்பாலோருக்கு, விவாதத்திற்குரிய கருத்துகளை முன்வைக்கும்போது அவற்றிற்கான சான்றுகளையும் தருதல் வேண்டும் என்னும் பொறுப்புணர்ச்சி கொஞ்சமும் இல்லை என்பது வருந்துதற்குரியது.
=================================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக