எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஆகச் சிறந்த உலகின் நெ.1 மூடத்தனம்!!!

‘கோயில் பலன்கள்’ என்னும் சிறு தலைப்பில், ‘ராணி’ [11.08.2019] வார இதழில் இடம்பெற்ற ‘வீட்டு வாஸ்து’ குறித்த விதிமுறைகளையும், அவற்றின் மீதான நம் ஐயங்களையும். வாசித்து மகிழுங்கள்; பயன் பெறுங்கள்!

பலன் 1:
கோயிலுக்கு நேர் எதிரே வீடு அமையக்கூடாது. அமைந்தால் அது ‘ஆலயக் குத்து’ எனப்படும். அந்த வீட்டில் அதிக ஆசாரத்துடன் இருத்தல் வேண்டும் குறிப்பாக, மாதவிலக்கான பெண்கள் அந்த வீடுகளில் இருத்தல் கூடாது.

ஐயம்:
மாத விலக்கான பெண்கள் வீட்டில் இல்லாம வேறு எங்கே அடைக்கலம் தேடிப் போறது? கோயிலுக்கு எதிரே மாதவிலக்கு ஆகக்கூடாதுன்னா, ‘ஆயி’[மலம்]. மூத்திரம் எல்லாம் போலாமா? இதுகளைவிடவும் மாதவிலக்கு அசிங்கமானதுன்னு எந்த மடையன் சொன்னான்?

பலன் 2:
தாம்பத்திய உறவு கொள்வதில் தம்பதியர் கட்டுப்பாடு காத்தல் வேண்டும்.

ஐயம்: 
கட்டுப்பாடுன்னா என்ன? ஒன்னும் புரியலையே. கோயிலுக்குப் போயி, தாலாட்டுப் பாடி சாமியைத் தூங்க வைச்சிட்டு வந்து உடலுறவில் ஈடுபடுறதா? சாமி கோயிலைவிட்டு வெளியேறி ஊர்வலமோ சுற்றுலாவோ போற நேரம் பார்த்துப் புணர்ச்சி பண்றதா?

பலன் 3:
வீட்டுக்கு எதிரே பாழடைந்த வீடு, பாழ்பட்ட கிணறு, குட்டிச்சுவர் எல்லாம் இருத்தல் கூடாது.

ஐயம்:
இருந்தா..... பாழடைஞ்ச வீடு மாதிரி கோயிலும் பாழடைஞ்சி போயிடுமா?

குட்டிச்சுவர் அவசரத்துக்கு ஒதுங்குற இடம். அவசரம்னா, ஒன்னுக்கு இருக்கிறது; ‘அது’ விசயத்தில் ஒன்னா இருக்கிறதுன்னு எதுவாகவும் இருக்கலாம். சாமி இதையெல்லாம் கண்டும் காணாம இருக்கப் பழகிக்கணும்!
பாழடைந்த வீடு க்கான பட முடிவு
தரமான பல உள்ளடக்கங்களுடன் பெரும் எண்ணிக்கையிலான வாசகர்களின் நிரந்தர ஆதரவைப் பெற்ற முன்னணி வார இதழான ‘ராணி’, இனியும் இதுபோன்ற வாஸ்துக் குறிப்பு[குப்பை]களைத் தவிர்ப்பது நல்லது.
==============================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக