எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

தாய்மொழியைப் போற்றும் வெங்கையா நாயுடு அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்!

நடுவணரசில் மிக உயரிய தகுதியைப் பெற்றவர்கள் பெரும்பாலும், இந்தி வெறியர்களுக்கு அஞ்சி, இந்தி மொழியை ஆதரித்துப் பரப்புரை செய்வதே வழக்கமாக உள்ளது.

இதற்கு முற்றிலும் மாறுபட்டவர் இந்தியக் குடியரசின் துணைத் தலைவரான வெங்கையா நாயுடு அவர்கள்.

பொதுக்கூட்டங்களில் பங்குபெறும்போதெல்லாம் தாய்மொழிக்கு முன்னுரிமை தருதல் நம் கடமை என்பதைத் தவறாமல் வலியுறுத்துவார்.

சில நாட்கள் முன்பு, ‘மாநிலங்களவை’ நிகழ்வில்   பங்கு பெற்றபோது, உறுப்பினர்கள் அவரவர் தாய்மொழியில் உரை நிகழ்த்தியதைப் பெரிதும் போற்றி மகிழ்ந்திருக்கிறார். நாளிதழ்ச் செய்தி.....

[நன்றி: தினகரன்{08.08.2019} நாளிதழ்] 

“எதிர்காலத்தில் அனைத்து உறுப்பினர்களும் மாற்று மொழியைப் புரிந்துகொள்ள வசதியாக மொழியாக்க வசதி மேற்கொள்ளப்படும்” என்று அவர் அறிவித்திருப்பது தாய்மொழிப் பற்றுக்கொண்டோரைப் பேருவகையில் ஆழ்த்துகிறது.
=================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக