பக்கங்கள்

வியாழன், 31 அக்டோபர், 2019

மூன்று பெரிய மதங்களும் மூன்று சிறிய கேள்விகளும்!

கிறித்துவ மதம், இஸ்லாம் மதம், இந்து மதம் ஆகிய மூன்றும் உலகின் மிகப் பெரிய மதங்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

The World Factbook கணிப்பின்படி..........

உலகின் மக்கள் தொகை: 7,021,836,029 (July 2012 est.)

கிறித்தவர்கள்: 33.39% (Roman Catholic 16.85%, Protestant 6.15%, Orthodox 3.96%, Anglican 1.26%),

இசுலாமியர்: 23.2%,

இந்துக்கள்: 13.8%, பௌத்தர்: 6.77%, சீக்கியர்:0.35%, .................[Wikipedia]

Top Ten Religions of the World with maps and tables ...’ தரும்[பழைய] புள்ளி விவரம்:

Religion:Members:
Christianity2 Billion
Islam1.2 Billion 
Hinduism785 Million 
Buddhism360 Million 
Judaism17 Million
Sikhism16 Million
Baha'i5 Million
Confucianism5 Million
Jainism4 Million
Shintoism3 Million
Wicca.7 Million
Zoroastrianism.2 Million

இந்த மதங்களின் வரலாற்று ரீதியான நடவடிக்கைகளால் சமுதாயத்திற்கு விளைந்த நன்மை தீமைகள் குறித்துக் கணக்கற்ற ஆய்வுகளும் விவாதங்களும் நிகழ்த்தப்பட்டன; படுகின்றன.

எனினும், மதங்கள் குறித்தும், அவை போற்றும் கடவுள்கள் குறித்தும் எழுப்பப்பட்ட மிக ஆழமான பல கேள்விகளுக்கு இன்னும் நேரிடையான பதில்களோ, ஏற்கும்படியான விளக்கங்களோ கிடைத்திடவில்லை.

இந்நிலையில், இம்மூன்று பெரிய  மதங்கள் குறித்து, என் உள்மனதைக் குடைந்துகொண்டிருந்த மூன்று சிறிய கேள்விகளை இங்கு பட்டியலிடுகிறேன்.
கேள்வி ஒன்று: 

பிற உயிர்களைக் கொன்று உணவாக்கிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிப்பதாக இஸ்லாம் மதவாதிகள் சொல்கிறார்கள். ‘In the Qur'an, we only have the right to kill any living being for consumption because He, the Creator of them, has given us this privilege via religion - killing for food would otherwise be a criminal act!’- [www.quranicpath.com/finerpoints/halal_meat.html]

‘பிராணிகள், குறைந்த அளவில் வலியை அனுபவிக்கும் வகையில் அவற்றைக் 
கொல்வதற்கான வழிகளையும் குரான் குறிப்பிடுவதாக அவர்கள் சொல்கிறார் 
கள்

‘பிராணியை அறுக்குமுன் கத்தியை நன்றாகத் தீட்டி, இறைவன் பெயரைச் சொல்லி,கழுத்தில் வேகமாக அறுப்பதுகழுத்தில் முக்கால் பாகம் வரை அறுப்பதால் பிராணிகளுக்கு அதன் வலி  தெரியாதுஏன் என்றால் மூளைக்கும் கழுத்துக்கும் உள்ள வலி நரம்புகள் துண்டிக்கபடுகின்றனபிராணிக்கு அறுக்கும் போது உள்ள வலி வெறும் நொடிதான் ’ [hadith-collection.blogspot.com/p/blog-page_06.html]

ஐம்பது நொடியோ ஐந்து நொடியோ ‘வலி’ உண்டு என்பது உண்மைதானே?

இங்கே இறைவன் பெயரைச் சொல்வதன் அவசியம் என்ன? என்ன பயன்? வலி முற்றிலும் 
இல்லாமல் போகிறதா என்ன?

எல்லாம் வல்லவன் இறைவன். அனைத்தையும் படைத்தவனும் அவனே. படைப்பாளியான அவன், உயிர்கள் ஒன்றையொன்று கொன்று தின்று வாழும்படியாக ஏன் படைத்தான்?

படைத்தது இருக்கட்டும், வலி உணர்வைத் தந்தது ஏன்? 

செய்வதையும் செய்துவிட்டு, வலியைக் குறைப்பதற்கான வழிகளையும் அவனே குரான் மூலம் சொல்லித் தருகிறானா? கடவுள் என்ன விளையாடுகிறாரா?

இஸ்லாம் மதவாதிகள் இதுபற்றியெல்லாம் சிந்தித்ததே இல்லையா?


கேள்வி இரண்டு:

கடவுளின் புதல்வரான ‘ஏசு’,  மீண்டும் இம்மண்ணில் வந்து 
பிறக்கவிருப்பதாகக் கிறித்தவ மத போதகர்கள் 
மேடைகளில் முழங்குவதும் ஊடகங்களில் உரையாற்றுவதும் யாவரும் 
அறிந்ததே.

அவர் மீண்டும் அவதரிப்பதற்கான  அவசியம் எதனால் நேர்ந்தது?

ஏற்கனவே அவதரித்த போது, தன் அவதரிப்பின் நோக்கங்களை முற்றிலுமாய் நிறைவேற்றத் தவறினாரா? அப்படியொரு தவற்றைக் கடவுளின் புதல்வர் செய்வாரா?

கடவுள், கடவுளாக இருந்துகொண்டே எதையும் சாதிக்க முடியும் என்கிறபோது அவர் மனித உருவில் அவதரிப்பதற்கான தேவை ஏன் நேர்ந்தது?

கிறித்தவ மதபோதகர்கள் சிந்திப்பார்களா?


கேள்வி மூன்று:

இஸ்லாமிய மதம் வன்முறையால் பரப்பப்பட்டது என்பார்கள். “இல்லை...இல்லை. இங்கே நிலவும் சமத்துவம்தான் பிற மதத்தவர் எம் மதத்தைத் தழுவக் காரணம்” என்கிறார்கள் இஸ்லாம் மதவாதிகள்

 ‘கிறித்தவம் பணபலத்தால் விரிவுபடுத்தப்பட்டது’ என்பதை மறுத்து, “ஏழை எளியவர்களுக்கு நாங்கள் பலன் கருதாமல் செய்யும் தொண்டுதான் எங்கள் மதம் வளரக் காரணம்” என்கிறார்கள் கிறித்தவ மதபோதகர்கள்..

இவர்களின் நிலை இவ்வாறாக  இருக்க, ஜாதிமத வேற்றுமைகள் குறித்தோ, பொதுத் தொண்டு குறித்தோ பெரிதும் கவலை கொள்ளாமல், பல்லாயிரக் கணக்கில் பிள்ளையார் சிலைகளைக் கரைப்பது, ஆண்டு தவறாமல் ஆண் பெண் சாமிகளுக்குக் கல்யாணம் கட்டி வைப்பது, அறிவுக்கொவ்வாத, கடவுளர் பற்றிய ஆபாசக் கதைகளை மேடைகளிலும் ஊடகங்களிலும் சலிக்காமல் சொல்லிக்கொண்டிருப்பது என்றிவ்வாறு மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறார்கள் இந்துமதவாதிகள்.

மூடநம்பிக்கைகளை வளர்ப்பதன் மூலம் தம் மதத்தை வளர்க்க முடியும் என்று நம்புகிறார்கள் இவர்கள்.

இந்த அறிவியல் யுகத்தில் இனியும் இந்த நம்பிக்கை நீடிக்குமா?

மேற்கண்டவை, நான் கேட்ட கேள்விகள் . இன்னும் கேட்க நினைப்பவை எத்தனையோ!
*****************************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக