பக்கங்கள்

வெள்ளி, 4 அக்டோபர், 2019

துறவி பரமாச்சாரியார் ஏன் அழுதார்?

#இது ஸ்ரீரங்கத்துச் சம்பவம்.

ஆலய நுழைவுப்போராட்டங்கள் நடந்த காலக்கட்டம் அது.

கூட்டம் கூட்டமாய்க் கோயிலின் வாசல் முன் நின்றுகொண்டு, கோயிலில் உள்ள கடவுள்களைத் தரிசிக்கத் தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று அனுமதி மறுக்கப்பட்டவர்கள் அப்போது போராடினார்கள்.

ஸ்ரீரங்கத்திலும் அது நடந்தது.
ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குள் நுழையத் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும், ரங்கநாதரைத் தரிசிக்கத் தங்களுக்கும் உரிமை தேவை என்றும் முழக்கங்கள் எழுப்பிக்கொண்டிருந்தார்கள் அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.

அவர்கள் கோயிலின் முன்னால் திரள ஆரம்பித்தபோதே, அதைத் தடுத்து நிறுத்துவதற்காக, அக்கிரகாரவாசிகள் ஒன்றுகூடி ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆளாளுக்கு ஒரு யோசனையை அள்ளித் தெளித்தவாறிருந்தனர்.

இளம் பிராயத்துப் பிராமணர்கள், “நாம் எல்லாரும் கோயில் வாசலில் நின்னுப்போம். அவா வந்தா அடிச்சி வெரட்டிடலாம்” என்று சொல்லிக் குதித்தார்கள்.

ஒரு நடுத்தர வயதுக்காரர், “அபிஷ்டுகளா, அவனுக மேல நம் கை பட்டா தீட்டாயிடும். கை படாம வெரட்டணும்” என்று ஆச்சாரமான யோசனை ஒன்றைத் தெரிவித்தார்.

‘ஆம்பிளைகள் யாரும் போக வேண்டாம். கோயிலுக்குப் போற மாதிரி அர்ச்சணைத் தட்டில் மிளகாய்ப் பொடியை நம்ம பொம்மனாட்டிகள் மறைச்சி வெச்சிண்டு சாமி கும்பிடுற மாதிரி போகட்டும். அவா பக்கதில் போனதும் அவா மேல மிளகாய்ப் பொடியைத் தூவட்டும். அவா எல்லாரும் அடிச்சிபிடிச்சி ஓடிடுவா’ என்று ஏகமனதாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

மடிசார் கட்டிண்டு முப்பதுக்கும் மேற்பட்ட மாமிகள் கிளம்பினார்கள்.

முன்னேற்பாட்டின்படி, போராட்டக்காரர்களை நெருங்கியதும் அவர்கள் மீது மிளகாய்ப் பொடியை இறைத்தார்கள்.

போராட்டம் நடத்தியவர்கள் கண்ணெரிச்சல் தாங்க இயலாமல் கூச்சலிட்டவாறே கதறியபடி கலைந்துபோக முயன்றார்கள்.

பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார், மொளா பிராமணப் பொம்மனாட்டிகள் மீது தடியடி நடத்தி அவர்களை கலையச் செய்தார்கள்.

இதை நான் சங்கராச்சாரியாரிடம் சொன்னபோது, “ஐயய்யோ, அபச்சாரம்...அபச்சாரம். போலீஸ்காரங்க நம்ம பொம்மனாட்டிகளை அடிச்சுட்டாளா?” என்று கேட்டவாறே கண்ணீர்விட்டு அழுதார் அவர்.

அவர் அழுது அதுவரை நான் பார்த்ததில்லை#
===========================================================================
‘இந்துமதம் எங்கே போகிறது?’ என்னும் தம் நூலில் இந்த நிகழ்வைப் பதிவு செய்தவர் ‘ராமானுஜ தாத்தாச்சாரியார்’


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக