எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 12 நவம்பர், 2019

விகடனுக்கு[வார இதழ்]க் கதை எழுதுறது ரொம்ப ரொம்பச் சுலபம்!!!

தரத்தில் மட்டுமல்லாமல், விற்பனையிலும் நம்பர் 1 ஆகத் திகழும் ‘ஆனந்த விகடன்’ வார இதழ், சில வாரங்களுக்கு முன்பு கீழ்க்காணும் வகையிலான வேண்டுகோளை முன்வைத்திருந்தது.

சாயிபாபா பற்றிய தங்களின் அனுபவங்களை வாசகர்களும் அனுப்பலாயினர். அவற்றை..... 

என்னும் தலைப்பின் கீழ் விகடன் வெளியிட்டுவந்தது. தொடர்ந்து வாசிக்க நேர்ந்தாலும் விமர்சனம் எழுதுவதைத் தவிர்த்தேன்.


அண்மையில்[தேதியைக் குறித்துவைக்கவில்லை] வெளியான புதிய விகடனில் மேற்கண்டதொரு[நகல் பதிவு] கதையையும் வாசித்தேன்.

சாயிபாபா, கரையும் தன்மையுள்ள இரண்டு மண்குடங்களை வாங்கி[வேக வைத்த குடங்கள் கிடைக்கவில்லையோ?!], அவற்றில் தண்ணீர் நிரப்பிச் செடிகளுக்கு ஊற்றியதாகச் சொல்லப்படும் நிகழ்வை அறிந்து மேனி சிலிர்த்தேன்.

இந்தக் கதையை எழுதிய பாபா பக்தர் அபாரக் கற்பனைத் திறன் வாய்த்தவர் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

இதைவிடவும் சிறந்த கதைகளை உங்களாலும் படைத்திட இயலும்.

இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். தாள் எடுத்துப் பதிவு செய்து விகடனுக்குத் அனுப்புங்கள்.

உங்கள் படைப்பை விகடன் பிரசுரிப்பதோடு பெரும் தொகையைச் சன்மானமாகவும் வழங்கும்.

வாழ்க விகடன்! வளர்க பாபா புகழ்!!
=======================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக