அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 3 நவம்பர், 2019

அந்தச் சாமி சந்நிதியை ‘ஏ.சி.’ பண்ணுங்கப்பா!

கீழ்வரும் நகல் பதிவுகளை வாசியுங்கள்.

அம்மனிடம் சக்திவேல் பெற்றதால், சந்நிதியில் அமர்ந்த முருகப் பெருமானின் திருமேனி பேரானந்தத்தால் சிலிர்க்க, அது கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்திருப்பார்களேயானால் அது வரவேற்கத்தக்க செயலாகும்.

முருகப்பெருமானின் மேனி சிலிர்க்கவில்லை. மாறாக, வேர்வைத் துளிகளைச் சிந்தியிருக்கிறது[இதற்குக் காரணம், சந்நிதியில் நிலவிய புழுக்கம்]. இதைக் கண்டு பக்தகோடிகள் மனம் வருந்தியிருந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருந்திருக்கும்.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனியேனும் புழுக்கம் காரணமாகக் கந்தனின் திருமேனியில் வியர்வைத் துளிகள்  அரும்பாதிருக்க..... 

கோயிலை நிர்வகிப்பவர்கள், சந்நிதியைக் குளிர்விப்பதற்கான[ஏ.சி.] வசதியை உடனடியாகச் செய்து முடித்தல் வேண்டும்.

செய்வார்களா? 
=======================================================================
இதுபோன்ற செய்திகளை அன்றாடம் வெளியிட்டு ஆன்மிகப் பணி புரியும் ‘உண்மை விளம்பி’யான அந்தக் ‘கதிர்’ பரப்பும் நாளிதழுக்கு நம் நன்றி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக