எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 22 மார்ச், 2020

எழுத்தாளர் இந்துமதிக்கு ஒரு வேண்டுகோள்!

தினமலரில்,  நீங்கள்[எழுத்தாளர் இந்துமதி] அண்மையில் எழுதிய ஆன்மிகக் கட்டுரையின்[தொடர்] இறுதிப் பகுதி இது.

பக்தர் குலசேகரர், செத்தப்புறம் கிருஷ்ணனின் திருநாமத்தை உச்சரிக்க முடியாது என்பதால் உயிரோடு இருக்கும்போதே அதை உச்சரிச்சி அவரோட திருவடியை அடையணும்னு ஆசைப்படுறார்.

“என்னை நினப்பவர்கள் என்னிடம் வருகிறார்கள்”னு அந்தக் கிருஷ்ண பரமாத்மாவும் அர்ஜுனனிடம் சொல்றாரு.

சரி.....

அவர்[கிருஷ்ண பரமாத்மா] எங்கே இருக்கிறார்? எவ்வளவு காலமா அங்கே இருக்கிறார்?  இங்கிருந்து அவர்கிட்டே போனவங்க எவ்வளவு பேர்? அவ்வளவு பேரும் வெறும் ஆவியா அவரைச் சுத்திச் சுத்தி வருவாங்களா? எந்தெந்த உருவில்  வேறே என்னவெல்லாம்  செய்யுறாங்க? எவ்வளவு காலத்துக்கு அங்கே இருப்பாங்க? அப்புறம் அவங்க கதி என்ன?

இப்படி விடை தெரியாத எத்தனையோ கேள்விகள் இருக்கு. இதுகளைப் பத்தியெல்லாம் கொஞ்சமும் சிந்திக்காம பலரும் எழுதினாங்க. இப்பவும் இம்மாதிரி ஆன்மிகக் குப்பைகளைக் கிளறுறதுக்கின்னே ஆட்கள் இருக்காங்க. ஆகையால்.....

நல்ல நாவல் ஆசிரியை என்று புகழ் பெற்ற நீங்கள் இனியும் அவை போன்ற நாவல்களை எழுதலாம். அன்புகொண்டு  குப்பை கிளறும் வேலையைத் தொடராதீர்கள்.