அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 22 மார்ச், 2020

எழுத்தாளர் இந்துமதிக்கு ஒரு வேண்டுகோள்!

தினமலரில்,  நீங்கள்[எழுத்தாளர் இந்துமதி] அண்மையில் எழுதிய ஆன்மிகக் கட்டுரையின்[தொடர்] இறுதிப் பகுதி இது.

பக்தர் குலசேகரர், செத்தப்புறம் கிருஷ்ணனின் திருநாமத்தை உச்சரிக்க முடியாது என்பதால் உயிரோடு இருக்கும்போதே அதை உச்சரிச்சி அவரோட திருவடியை அடையணும்னு ஆசைப்படுறார்.

“என்னை நினப்பவர்கள் என்னிடம் வருகிறார்கள்”னு அந்தக் கிருஷ்ண பரமாத்மாவும் அர்ஜுனனிடம் சொல்றாரு.

சரி.....

அவர்[கிருஷ்ண பரமாத்மா] எங்கே இருக்கிறார்? எவ்வளவு காலமா அங்கே இருக்கிறார்?  இங்கிருந்து அவர்கிட்டே போனவங்க எவ்வளவு பேர்? அவ்வளவு பேரும் வெறும் ஆவியா அவரைச் சுத்திச் சுத்தி வருவாங்களா? எந்தெந்த உருவில்  வேறே என்னவெல்லாம்  செய்யுறாங்க? எவ்வளவு காலத்துக்கு அங்கே இருப்பாங்க? அப்புறம் அவங்க கதி என்ன?

இப்படி விடை தெரியாத எத்தனையோ கேள்விகள் இருக்கு. இதுகளைப் பத்தியெல்லாம் கொஞ்சமும் சிந்திக்காம பலரும் எழுதினாங்க. இப்பவும் இம்மாதிரி ஆன்மிகக் குப்பைகளைக் கிளறுறதுக்கின்னே ஆட்கள் இருக்காங்க. ஆகையால்.....

நல்ல நாவல் ஆசிரியை என்று புகழ் பெற்ற நீங்கள் இனியும் அவை போன்ற நாவல்களை எழுதலாம். அன்புகொண்டு  குப்பை கிளறும் வேலையைத் தொடராதீர்கள்.