எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

300 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வழக்கின் மறுவிசாரணை!!!

நாம் வாசித்தறிந்த, அல்லது கேள்விப்பட்ட சில அதிசய நிகழ்வுகள், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் நினைவகத்தில் நிரந்தர இடம்பிடித்துவிடுவது உண்டு.

அவ்வாறான நிகழ்வுகளில் கீழ்க்காண்பதும் ஒன்று.

#சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று கிறித்துவ மதவாதிகள் நம்பினார்கள். இது தவறான நம்பிக்கை. உண்மையில் பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று நிகோலஸ் கோபர்னிகஸ்[15-16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த போலந்து நாட்டவர்] சொன்னார்.
கோபர்னிகஸ் சொல்வதே சரி என்று வாதிட்டார் வானிலை ஆய்வறிஞர் கலீலியோ[16-17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டவர்]. மதத்துக்கு எதிராகக் கருத்துச் சொன்னமைக்காக, கிறித்தவத் தலைமையகம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அவரின் வயதைக் கருத்தில் கொண்டு அதை வீட்டுச் சிறையாக மாற்றியது.
வாழ்நாளின் இறுதி ஏழு ஆண்டுகளைத் தனிமையில் கழித்தார் கலீலியோ. கண் பார்வை பறிபோனது.

அவர் இறந்தபோது, முறைப்படி அடக்கம் செய்வதற்கு மதக் குருமார்கள் அனுமதிக்கவில்லை.

என்றிவை போன்ற செய்திகள் பள்ளிப் பருவத்தில் வரலாற்றுப் பாடம் கற்றவர்கள் அனைவரும் அறிந்தவையே. கீழ்வருவது பலரும் அறியாத ஒன்றாக இருக்கக்கூடும் என்பது என் நம்பிக்கை.

கலீலியோ இறந்து 300 ஆண்டுகள் கழித்து, மதவாதிகள் நீதிமன்றம் அவர் வழக்கை மீண்டும் விசாரணக்கு ஏற்றுக்கொண்டு, கலீலியோ குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது!#
=============================================================
தகவல்கள், கூகுள் தேடல் மூலம் சரிபார்க்கப்பட்டன. பிழை காணின் மன்னித்திடுக