எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

திங்கள், 13 ஏப்ரல், 2020

’கிழப்பருவம்’ தவிர்க்க இயலாததா?!

‘இரட்டிப்பு’ ஆவது நம் உடம்பிலுள்ள அனைத்துச் செல்களின் இயல்பு.

இது நிகழ்வது எத்தனை தடவை?

ஐம்பது தடவை. அதன் பின்னர் இரட்டிப்பாகும் நிகழ்வு நின்றுபோகிறது என்கிறது அறிவியல். காரணம் என்ன?

ஒவ்வொரு செல்லின் இயக்கத்தின்போதும், அதனுள்ளிருந்து ‘கழிவுப்பொருள்’ வெளியேறுகிறது.. அந்தக் கழிவுப் பொருளுடன் வெளியிலிருந்து உள்நுழையும் ரசாயனப் பொருள்களும் இணகின்றன.  இரண்டும் இணைந்து நிகழ்த்தும் தாக்குதலால் செல்லில் சேதம் உண்டாகிறது. இதன் விளைவாக செல் இரட்டிப்பாவது தடைபட்டு, அது அழிந்துபோகிறது. இளமைத் தோற்றம் மாறிக் கொஞ்சம் கொஞ்சமாக மூப்படைகிறோம்.

செல்லிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருளை,  ‘free radicals' என்கிறது அறிவியல்.

கழிவுப் பொருள் உருவாவதையும் வெளியிலிருந்து சில ரசாயனப் பொருள்கள் உள்நுழைவதையும் தடுத்துவிட்டால் முதுமை அணுகுவதைத் தடுத்துவிட முடியுமாம்.

இதெல்லாம் சாத்தியப்படுவது எப்போது?

ஹூம்.....இப்போதைக்கு இல்லை!
========================================================================
ஆதாரம்: சுஜாதாவின், ‘கற்றதும் பெற்றதும்’ தொடர்[ஆனந்த விகடன், 27.05.2001]