அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

கால்களிலும் தோள்களிலும் விலங்கு சுமந்த பெரியார்!!!

‘பெரியார் பற்றிப் பெரியார்’[திராவிடர் கழக வெளியீடு] என்னும் நூலிலிருந்து பதிவு செய்த ஒரு நிகழ்வு. படியுங்கள். பெரியார் மீதான உங்களின் மதிப்பு பல மடங்கு உயரும்.

'என் வாழ்நாளில் எப்போதாவது ஜாதிமதத்தையோ கடவுளையோ உண்மையாக நம்பினேனா என்று இப்போதும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன். கண்டுபிடிக்கவே முடியவில்லை.

என் ஆறாவது வயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டேன். அது, ஈரோடு டவுனுக்குச் சற்று விலகியே இருந்தது. அதைச் சுற்றி வாணியச் செட்டிமார்களும், வேதக்காரர்களும், மூங்கிலில் பாய், முறம் பின்னுகிறவர்களும், சாயபுகளும் வசித்தார்கள். அந்தக் காலத்தில், இவர்களின் வீடுகளில் மற்ற ஜாதிக்காரர்கள் உணவு உண்ண மாட்டார்கள். ஆகையால், நான் பள்ளிக்கூடம் போகும்போது, “பொழங்கக்கூடாத ஜாதியார் வீடுகளில் தண்ணீர்கூடக் குடித்துவிடாதே” என்று சொல்லி அனுப்புவார்கள்.....

.....நானோ மேற்குறிப்பிட்ட, ஒதுக்கப்பட்ட ஜாதியார் வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடிப்பேன்; அவர்கள் வீட்டுப் பண்டங்களையும் வாங்கிச் சாப்பிடுவேன்.

இந்த விசயம் எங்கள் வீட்டை எட்டியது. “சீ சீ...இனிமே அங்கெல்லாம் சாப்பிடாதே” என்பதோடு அப்பா நிறுத்திக்கொண்டார். தாயாரோ, குடியே முழுகிவிட்டது போல் துயரப்பட்டார். 

அப்புறமும் குறிப்பிட்ட அந்த ஜாதிப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதும் பள்ளிக்குப் போவதும் தொடர்ந்தது.

என் பெற்றோர்கள் எவ்வளவோ சொல்லியும் நான் கேட்காததால் ஒரு காலில் விலங்கிடப்பட்டேன். அதன் பிறகும் நான் மாறவில்லை. ஒரு கால் விலங்குடன் அந்த ஜாதிப் பிள்ளைகளுடன் சுற்றினேன். என்னுடைய இன்னொரு காலுக்கும் விலங்கு பூட்டினார்கள். தோள்களிலும் விலங்கு. அவற்றைச் சுமந்துகொண்டே நான் விளையாடப் போவதும் தொடர்ந்தது.

அப்புறம் சர்க்கார் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன்.

படிப்பு முடியாத நிலையிலேயே கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டார் என் தாப்பனார்.'
========================================================================