அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 3 மே, 2020

“பூமி சூரியனிலிருந்து தோன்றியதல்ல” -விஞ்ஞானி ஏ.ஐ.ஓபாரின்

‘நெருப்புக்கோளமான சூரியனிலிருந்து சிதறிய சிறு பொறிதான் காலப்போக்கில் குளிர்ந்து குளிர்ந்து பூமி உருவானது’ என்பது அண்மைக்காலம் வரையிலான விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

‘உயிரின் தோற்றம்’ குறித்து ஆராய்ந்த உயிரியல் அறிஞர் ஏ.ஐ.ஓபாரின் இதை மறுத்துரைக்கிறார்.

உயிரின் தோற்றம் குறித்து அவர் எழுதிய நூலிலிருந்து[‘உயிரின் தோற்றம்’, ஏ.ஐ.ஓபாரின்; தமிழாக்கம்: நா.வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.முதல் பதிப்பு: பிப்ரவரி, 2008].....
//வெளிமண்டலத்திலுள்ள நட்சத்திரங்களுக்கும் கோள்களுக்குமிடையே இடைவெளிகள் உள்ளன. அந்த இடைவெளிகள் வெறுமையானவை[சூன்யம்] அல்ல. அங்கே வாயுக்களும் தூசுகளும் நிறைந்து காணப்படுகின்றன.  [சில நேரங்களில், இவை பெரிய மேகங்கள் போல உருவெடுக்கின்றன. பால்வெளி[Milky Way]யில் நட்சத்திரக் கூட்டத்திடையே, இந்த மேகங்கள் கரும் புள்ளிகளாகக் காட்சி தருகின்றன].

மேற்கண்ட, நூல் அல்லது நார் போன்ற வாயுப் பொருள்களும் தூசுகளும் இணைவதன் மூலமே நட்சத்திரங்கள் உருவாகின்றன என்று விஞ்ஞானி  எஃப்.ஜி.வெஸன்காவ் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்.

எனவே, தூசுவும் வாயுவும் கொண்ட மேகங்களிலிருந்து நட்சத்திரங்களும் சூரியனும் தோன்றியது போல பூமியும்[பிற கோள்கள் உட்பட] தோன்றியிருக்கக்கூடும்[சூரியனிலிருந்து தெறித்து விழுந்தது அல்ல]//

முக்கியக் குறிப்பு: இது குறித்து இன்னும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்ல வல்லவர்கள் அவர்தம் தளத்தில் பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.
=======================================================================
“நடுநடுவே விஞ்ஞானக் கருத்துகள் புரியாதிருப்பினும் முழுவதையும் படித்து, மையக் கருத்தை அறிந்துகொள்ள வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்” என்கிறார் தமிழாக்கம் செய்த வானமாமலை அவர்கள்.

நான் புரிந்துகொண்டவற்றை எளிமைப்படுத்திப் பதிவாக்கியிருக்கிறேன்.