அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 24 அக்டோபர், 2020

'குஷ்பு'வைப் போற்றுவோம்!!!

"பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்பட்டது. தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள சனாதன சக்திகள் மீண்டும் மனுஸ்மிருதியின் அடிப்படையில் இந்நாட்டின் ஆட்சி முறையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய சனாதனிகளின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகுகின்றன. இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன..... 

'தற்போது இந்தியாவை ஆட்சி செய்வது புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டமா? அல்லது மனுஸ்மிருதியா?' என்னும் கேள்வி எழுந்துள்ளது.

பெண்கள் அனைவரையும் மிக மிகக் கேவலமாக சித்தரிக்கிறது மனுஷ்மிருதி. ஒரு குறிப்பிட்ட வர்ணம் அல்லது சாதியைத்தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதாகப் பேசுகிறது. அதன் காரணமாகவே புரட்சியாளர் அம்பேத்கர் 1927ஆம் ஆண்டிலேயே அதைத் தீயிட்டுக் கொளுத்தினார்.

அத்துடன், அவருடைய நூல்கள் பலவற்றிலும் மனுஸ்மிருதியின் மனிதகுல விரோதக் கருத்துக்களை அம்பலப்படுத்தியுள்ளார். அதுபோலவே தமிழ்நாட்டில் தந்தைபெரியார் அவர்களும் மனுஸ்மிருதியை எரித்துள்ளார்." 

மனுஸ்மிருதி என்ற ஒரு நூல் நாட்டில் இருக்கும் வரை இந்தச் சனாதனிகளின் மனிதகுல விரோத வெறுப்புப் பிரசாரத்தை நிறுத்தவே முடியாது.

எனவே, வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்ணாகவும், பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று மீண்டும் குரலெழுப்ப வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

"புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கும் 'மனுநூலைத் தடைசெய்!' என்ற இந்த அறப்போராட்டத்திற்குச் சமூகநீதி மற்றும் சமத்துவத்தின் மீது அக்கறையுள்ள அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்" என்றிவ்வாறெல்லாம் திருமாவளவன் கூறியவற்றை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன[https://www.bbc.com/tamil/india-54660846].

திருமாவளவனின் இந்தக் கருத்து வெளிவந்த சில நிமிடங்களிலேயே, பெண்கள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த கருத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்றும்; மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவரது கருத்துக் குறித்துக் கூட்டணிக் கட்சிகள் பதில் சொல்ல வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த திரைப்படக் கலைஞர் குஷ்பு வலியுறுத்தியிருக்கிறார்[ஊடகச் செய்தி].

குஷ்புவைப் பொருத்தவரை, முன்னோர்களால் பேணி வளர்க்கப்பட்ட மனுதர்மம் காக்கப்படுதல் வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்.

நம் மனம் கவர்ந்த நடிகை. அவருக்கென ஒரு கோயில் கட்டிக் குடமுழுக்கெல்லாம் நடத்தியவர்கள் நாம். 

குஷ்புவுக்கும் திருமாவளவனுக்கும் இடையேயான விவாதத்தில் குஷ்பு வெற்றி பெற வேண்டும் என்பதே நம் போன்றோர் ஆசை. 

"பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு மனுவில் ஏதிமில்லை" என்று குஷ்பு கூறியதை மனதில் கொண்டு, பெண்கள் இழிவுபடுத்தப்பட்டதற்கான ஆதாரங்களைத் திருமா தேடக்கூடும். அவற்றைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல. குஷ்புவுடனான விவாதத்தில் திருமாவளவன் தோற்பார்.

ஆதாரம்: உங்களின் வாசிப்புக்கு மட்டும்.

//‘ஸூத்ருசோ.......................................................ப்ரஜபேன்மனும்...’[இரண்டு வரிகள்]

பொருள்: ஓர் அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக்கொண்டு பத்தாயிரம் முறை காளிதேவியை நினைந்து மந்திர செபம் பண்ணுகிறவன் தேவகுருவுக்குச் சமம் ஆவான்.

‘சாவம் ஹ்ருதயமாருஹ்ய................................................................’[நான்கு வரிகள்].

பொருள்: சுடுகாட்டில் அம்மணமாகப் பிணத்தின் மார்பில் அமர்ந்துகொண்டு, தன் வீரியத்தில்[விந்து] தேய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் மந்திரம் சொல்லிக் காளிதேவியைப் பூசிக்கிறவன் வெகு சீக்கிரம் அரசனாவான்.

‘ரஜ: கீர்ணபகம் நார்யா த்யாயன்யோயுத..................’[இரண்டு வரிகள்]

பொருள்: வீட்டுக்குத் தூரமான பெண்ணின் ரத்தத்தோடு கூடிய பெண்குறியைத் தியானித்துக்கொண்டு பதினாயிரம் உரு[மந்திரம்] செபிக்கிறவன் மதுரமான தன் பாடல்களால் உலகை மயக்கும் வல்லமை பெறுவான்.

‘................................................சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்[நான்கு வரிகள்]

பொருள்: புன்சிரிப்புடன் கூடிய முகத்தை உடையவளான காளிதேவியைத் தியானித்தவாறு, ஒரு பெண்ணைப் புணர்ந்துகொண்டே ஆயிரம் முறை செபிக்கிறவன் சிவபெருமானுக்கு ஒப்பாவான்.

‘ஸ்ருணோதி நூபுராராவம்.............................................................’[நான்கு வரிகள்]

பொருள்: மந்திரம் செப்பிப்பவன், தேவியின் சிலம்பொலியும் சங்கீதமும் கேட்டுக்கொண்டே மந்திரம் செபித்துக்கொண்டிருந்தால், தேவியானவள் மிக்க விருப்புடன் இவனைப் புணர்ச்சி செய்ய வருவாள். புணர்ச்சி முடிந்ததும் இவனுடைய அத்தனை விருப்பங்களையும் நிறைவேற்றுவாள்[சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் எழுதிய ‘ஞான சூரியன்’,சாமி புக்ஸ், சென்னை]//

===============================================================