அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 10 நவம்பர், 2020

கமல்ஹாசனின் 'கோட்டை'க் கனவும் 'தத்துப்பித்து' அறிவிப்பும்!!!

தன்னுடைய அடுத்த பிறந்தநாளைக் "கோட்டையில் கொண்டாடுவோம்" என அரசியல்வாதி கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை ஊடகங்கள் வாயிலாக அறிந்திட நேர்ந்தது [https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-says-next-birthday-will-be-celebrated-in-st-george-fort-402682.html  Monday, November 9, 2020, 18:09 [IST]

அவர், தன்னுடைய டிவிட்டர் செய்தியில்.....

'என் பிறந்த நாளை 'நற்பணி' தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள உள்ளும் புறமும் சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர். எதிர்காலத்தில் மிகச் சிறந்த அரசியல்வாதியாகவும் திகழக்கூடும்.

தன்னுடைய அடுத்த பிறந்த நாளைக் "கோட்டையில் கொண்டாடுவோம்" என்று அறிவித்திருக்கிறார். இதன் வாயிலாக, தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்பதை அறிய முடிகிறது.

முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது தவறல்ல. வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆக விரும்பும் அவர், தன்னுடைய அடுத்துவரும் பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடவிருப்பதாகச் சொல்லியுள்ளது பெரும் தவறாகும். 

தேர்தலில் வென்றால், கோட்டையில் ஒரு முதலமைச்சராகப் பணியாற்றலாமே தவிர, கமல்ஹாசனாகப் பிறந்தநாள் எல்லாம் கொண்டாட முடியாது; கூடாது.

அரசு விதிமுறையின்படி, அரசு அலுவலகங்களில் அலுவலர்களோ, தனி நபரோ, அரசியல் கட்சியினரோ பிறந்தநாள் கொண்டாடுவது குற்றம் என்பதைக் கமல் அறியவில்லை போலும்!

கீழ்க்காணும் நிகழ்வுகள் அவரின் வாசிப்புக்கு:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைப் பேரூராட்சியின் செயல் அலுவலர் ராஜா.  இவர் நடிகர் விஜய்-இன் தீவிர ரசிகர். ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாளைச் சிறப்பாக அலுவலகத்தில் வைத்துக் கொண்டாடி, மக்களுக்குக் கொரோனா முகக்கவசங்கள் வழங்கத் திட்டமிட்டார்.

அதன்படி, விஜய் பிறந்தநாள் தினத்தன்று, ஊத்தங்கரைப் பேரூராட்சி அலுவலகத்தில் பேணர் கட்டி, கேக் வெட்டி அலப்பறையாகக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் கொரோனா காலம் என்பதால் நடிகர் விஜய் பெயரைச் சொல்லி, பொது மக்களுக்கு முகக் கவசங்களும் விநியோகிக்கப்பட்டது.

இந்தக் கொண்டாட்டங்களை முன்னெடுத்ததோடு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, நிகழ்வுகளை வீடியோவாகப் பதிவு செய்து அதை இணையத்தில் பரப்பி உள்ளார். இந்த வீடியோ கிருஷ்ணகிரி மாவட்ட வாட்ஸ் ஆப் குழுக்களில் வைரலாகப் பரவியுள்ளது.

இதையடுத்து, பேரூராட்சிச் செயல் அலுவலர் ராஜாவைப் பணியிட நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. 

இதன் வாயிலாக, அரசு விதிமுறையின்படி, அரசு அலுவலகங்களில் அலுவலர்களோ,  தனி நபரோ, அரசியல் கட்சியினரோ பிறந்தநாள் கொண்டாடுவது குற்றம் என்பது அறியத்தக்கது.

https://tamil.samayam.com/latest-news/state-news/krishnagiri-actor-vijay-birthday-celebration-in-govt-officer-video-went-viral-responsible-suspended/articleshow/76710060.cms

                                        *                 *             *

மத்தியப் பிரதேசம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓர் அரசு அலுவலகத்தில் நேற்று ஒரு ஊழியருக்குப் பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டிக் கொண்டாடினர். தொடர்ந்து அங்குள்ள அரசு ஊழியர்கள் பணி நேரத்தின் போது கதவைப் பூட்டிவிட்டு உள்ளே குத்தாட்டம் போட்டுள்ளனர். 'பத்மாவத்' படத்தின் 'கூமர்' உள்பட பல்வேறு இந்திப் பாடல்களுக்கு அவர்கள் டான்ஸ் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

இந்தச் செய்தி அறிந்த தேவாஸ் மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததுடன் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். 

https://newstm.in/national/general/mp-employed-civil-servants-during-work-hours-the-video-is/c77058-w2931-cid335537-su6229.htm