அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 16 டிசம்பர், 2020

தீவிர உடற்பயிற்சியால் விளையும் தீமைகள்!!!

அவரவர் உடல்திறனுக்கு ஏற்ற வகையில், உரிய முறையில் உடற்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் உண்டு என்பது உண்மை. ஆனால், தேவைக்கு அதிகமான தீவிர உடற்பயிற்சியால் பெரும் தீமைகள் விளைகின்றன என்பதும் மறுக்க இயலாத உண்மையாகும்.

பல்வேறு தளங்களில் தேடிப் பொறுக்கித் தொகுத்த அவ்வகையிலான தீமைகளைக் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.

தீமைகள்:

*கடினமான உடற்பயிற்சி செய்பவர்கள் மாரடைப்பு, வாதம் போன்ற நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம்.

*பெண்கள், கடின உடற்பயிற்சியைத்  தொடர்ந்து செய்தால், மாதவிடாய் ஏற்படாமல் போவது, எலும்புகள் வலுவிழந்து தேய்ந்து போவது போன்ற பிரச்சினைகளுக்கு அவர்கள் உள்ளாக நேரிடலாம்.

*ஆண்களுக்கு இதே கடின உடற்பயிற்சியால் உடல் சோர்வு, விந்து ஊற்பத்தியில் குறைபாடு போன்றவை ஏற்பட்டு ஆண்மைத்தன்மை குறைந்துவிடக்கூடும்.

*இம்மாதிரிப் பயிற்சியால் உடலுக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது.

*இதன் மூலம் ஒருவரின் வாழ்நாளே குறைந்துவிடலாம் என்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

*இதனால் அப்போதைக்குப் பாதிப்பு இல்லையென்றாலும்,  வயது கூடும்போது  மூட்டுகளில் பிரச்சினை, தசை நார் கிழிவு போன்ற கெடுதிகள் உண்டாகலாம்.

*திக உடற்பயிற்சியால் உடலின் சக்தியில் பெரும்பகுதி செலவாகிவிடும். அதன் விளைவாக உடல் சோர்வு உண்டாகும்.  இரவில் 7-8 மணி நேரம் தூங்கி, காலையில் நல்ல உணவு உண்டாலும்கூட இந்தச் சோர்வு நீங்காது. முன்பு 5 நிமிடங்களில் கடந்த தூரத்தைக் கடக்க இப்போது அதிக நேரம் தேவைப்படும்.

*உடம்பு வலி அதிகமாவதோடு, பயிற்சியை நிறுத்தினால் வலி அதிகரிக்கும். கடுமையான தலைவலியும் தாக்குதல் தொடுக்கக்கூடும்.

*தசைகளில் பிடிப்பு, முதுகு வலி, சுளுக்கு போன்றவையும் ஏற்படும்.

*அதீத உடற்பயிற்சியை மேற்கொண்டால், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியின் அளவு குறைந்து, சளி, இருமல், காய்ச்சல் போன்றவை எளிதில் தொற்றும்.

*பிறப்புறுப்பு சுருங்கும் அபாயமும் உள்ளது. ஆண்களுக்கு விதைகளும் சுருங்கும்.

*பெண்களுக்குக் கருத்தரிப்பதில் பிரச்சனை உண்டாகும். 

*அதிக நேரம் உடற்பயிற்சி மற்றும் ஓட்டத்தில் ஈடுபடுபவர்களின் குடல் பாதிக்கப்பட்டு “என்டோடாக்ஸின்’ எனப்படும் பாக்டீரியாவால் உண்டாக்கப்படும் நச்சுப்பொருள் ரத்தத்தில் கலந்து, அது “செப்சிஸ்’ நோய்க்குக் காரணமாக இருப்பதும் ஆராய்ச்சி முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. 

*உடற்பயிற்சி அளவுக்கு அதிகமானால், பசியின்மையால் பாதிக்கப்பட வேண்டியிருக்கும். இதனால் உடம்புக்குப் போதுமான சத்துக்கள் கிடைக்காமல், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

எது சிறந்த பயிற்சி?

<>சீனா, நெதர்லாண்ட், ஜப்பான் போன்ற நாடுகளில் வசதி இருந்தும கூட, நடந்து செல்வதையும் சைக்கிளில் செல்வதையும் பழக்கபடுத்திக் கொண்டுள்ளனர். 

<>'நடைப்பயிற்சி எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்றாகும். நடைப்பயிற்சியைப் பழக்கமாக்கிக் கொள்வதால் ரத்த ஓட்டமானது சீராகிறது; நுரையீரல் சுவாசம் சீராகிறது; செரிமானக் கோளாறு சீராகிறது; உடல் வலுப்படுகிறது' எங்கிறார்கள் மருத்துவர்கள்.

<>நடைப்பயிற்சி என்பது[அவரவர் தேவைக்கேற்ப] நான்கு மணிநேரம் நீந்துவதற்கும், நான்கு மணிநேரம் டென்னிஸ் விளையாடுவதற்கும் சமமாகும். ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி இறங்குவதும் நல்ல உடற்பயிற்சியே.

<>வீடடு வேலைகளைச் செய்தல், விளையாட்டு மைதானத்தில் குழந்தைகளுடன் விளையாடுதல் போன்றவையும் விரும்பத்தக்க பயிற்சிகளாகும்.

<>நடைப்பயிற்சியின்போது உடலிலுள்ள எல்லாத் தசைத் தொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் மூச்சைச் சற்று அதிகப்படுத்துகிறோம்; இரத்தச் சுழற்சி உடலின் எல்லாப் பாகங்களின் இயக்கத்தையும் அதிகப்படுத்திப் பின் சம நிலைக்கு வருகிறது. 

ஆக, தீவிரப் பயிற்சி என்பது அனைவருக்கும் பொதுவானதல்ல; சிக்ஸ் பேக்ஸ், எய்ட் பேக்ஸ் உருவாக்குவதற்கான தேவை இருந்தால் மட்டுமே அதனை மேற்கொள்ளலாம். அதுவும் முறையாக ஒரு பயிற்சியாளரின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும்.

எனவே, உங்களின் உடல் திறனுக்கேற்ற முறையான எளிய பயிற்சிகளைச் செய்து பயன் மிகப் பெற்றிட வாழ்த்துகள்!

வருகைக்கு நன்றி.

===============================================================