அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 17 டிசம்பர், 2020

இந்துமதம் வளர்ந்ததா, வளர்க்கப்பட்டதா?!

தமிழர்கள் பௌத்த, சமண சமயக் கொள்கைகளைக் கடைபிடித்து  மனித நேயம் போற்றி வாழ்ந்தவர்கள்.

இந்துமத[அன்றைய சைவ சமயம்]மதத்தின் கொடூர விதிமுறைகளையும், மூடச் செயல்பாடுகளையும் எதிர்த்த காரணத்தினால் அம்மதவாதிகளால், மன்னர்களின் துணையுடன் பல்லாயிரம் பவுத்தம் சமணம் ஆகிய சமயங்களைச் சார்ந்த தமிழர்கள் உயிருடன் கழுவேற்றிக் கொல்லப்பட்டார்கள் என்பது வரலாறு.

கழுவேற்றம் என்பது சிலுவையைவிடக் கொடூரமான மரணதண்டனை முறையாகும்.

கூர்மைப்படுத்தப்பட்ட கழுமரத்தில் எண்ணெய் தடவி, கழுவேற்றப்படுபவனைப் பிடித்து நிர்வாணமாக்கி, குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயைக் கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணை தடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலைத் துளைத்துக்கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள் அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது. கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும், நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும்.

சமணர்களும் பௌத்தர்களும் தமிழுக்குச் செய்த தொண்டு அளப்பரியது.

இரண்டு நன்னெறிச் சமயங்களும் இறைமறுப்பைக் கொள்கைகளாகக் கடைபிடித்து மனிதர்களை மனிதர்களாக வாழ வழிசெய்தவை.

திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் சமண மதத்தவர் என்பது பெரும்பான்மையான ஆய்வாளர்களின் கருத்து..

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி எனும் மூன்றும் சமண சமயச் சார்புடையவை.

மணிமேகலையும்,குணடலகேசியும் பௌத்த சமய நூல்கள்.

ஐஞ்சிறுங் காப்பியங்களும் சமண சமயக் காப்பியங்களே.

எட்டுத் தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டும் சமண நூல்கள். பத்துப்பாட்டுகளில் திருமுருகாற்றுப்படை தவிர எஞ்சிய ஒன்பது பாடல்களும் பௌத்த, சமண சமயச் சார்புடையவை ஆகும்.

பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களில் அனைத்து நூல்களுமே சமண சமயத்தவரால் இயற்றப்பட்டவை.

பழமையான தொல்காப்பியம் சமண நூல்.

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் சமண சமய நூல்.

நீதிநூல்களில் ஏலாதி, சிறுபஞ்சமூலம், நாலடியார் பழமொழி நானூறு ஆகியவை சமண நூல்களாகும். சமண சமயத்தவர் தமிழுக்குச் செய்துள்ள தொண்டுபோல வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்குச் செய்யவில்லை.

இந்து மதம் வர்ணாசிரம முறையில் வாழவேண்டும் என்கிறது. பௌத்தமும், சமணமும், மனிதன் எந்தவொரு பாகுபாடும் இன்றி அறிவுள்ள மனிதனாக வாழவேண்டும் என்கின்றன.

மக்கள் அறிவுள்ள மக்களாக வாழவேண்டும் என்று போதித்த காரணத்தினாலும், தமிழ் மக்கள் பௌத்த சமண மார்க்கத்தை அதிகம் ஏற்றதாலும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சைவ மதத்தவர்கள் மன்னர்களின் ஆதரவுடன், பல்லாயிரக் கணக்கில் பௌத்த, சமணத் தமிழர்களைக் கழுவேற்றியது மட்டுமின்றி கொலை செய்தல், கலகம் விளைவித்தல், அவர்களின் உடைமைகளைக் கவர்தல், கொடுமைப்படுத்துதல், யானைகளை ஏவி மிதித்துக் கொல்லுதல் போன்ற பல்வேறு தீமைகளைச் செய்தார்கள்.

இந்துமதத்தை[சைவ சமயம்]த் தழுவாத காரணத்தினால் வழங்கப்பட்ட இம்மாதிரித் தண்டனைகளுக்கு அஞ்சித்தான் அன்றைய தமிழர்களில் பலரும் இந்துமதத்துக்கு மாறினார்கள்.

இந்துமதம் வளர்ந்த/வளர்க்கப்பட்ட லட்சணம் இதுதான்!

==========================================================================================

  நன்றி: