புதன், 21 ஏப்ரல், 2021

2ஆவது கொரோனா தடுப்பு ஊசியால் 'பக்க விளைவுகள்' அதிகரிப்பது ஏன்?

முதல் தடுப்பூசி[ஷாட்] மூலம் பக்க விளைவுகளை அனுபவிக்காத பலர், இரண்டாவது ஷாட் மூலம் சில விளைவுகளை அனுபவிக்க நேரிடலாம். அதிக அளவிலும் அது இருக்கக்கூடும். ஆனாலும், கவலைப்பட ஏதுமில்லை.

முதல் தடுப்பு ஊசி, வைரஸை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை உடம்புக்குக் கற்பிக்கிறது.

ஊசி போடும் இடத்தில் வலி, புண், விறைப்பு, லேசான காய்ச்சல் அனைத்தும் முதல் முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் எதிர்பார்க்கப்படும் அறிகுறிகளாக இருக்கலாம். 

2ஆவது தடுப்பூசிக்குப் பிறகு..... 

சோர்வு, குமட்டல்,  தலைவலி போன்றவை அதிகமாக இருக்கலாம். இளம் வயதினருக்கும், பெண்களுக்கும் பாதிப்புகள் அதிகமாக இருந்திட வாய்ப்புகள் அதிகம். அதிகமான பக்க விளைவுகளின்போது செல்கள் அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன என்பது அறியத்தக்கது.

பக்க விளைவுகள் நீடிக்கும் கால அளவு:

பக்க விளைவுகள் தடுப்பூசி பெற்ற பிறகு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு இருக்கும். பின்னர் அவை தாமாகவே மறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

பக்க விளைவுகள் என்பது அவசியமான ஒன்றல்ல; சிலரை அவை பாதிப்பதில்லை.

பக்க விளைவுகளே இல்லையென்றால், தடுப்பூசி வேலை செய்யவில்லை என்று கருத வேண்டியதில்லை. ஊசியின் செயல்பாடுகள் இயல்பானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

பக்க விளைவுகள்:
பக்க விளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையாகத்தான் இருக்கின்றன. இது ஏதோ ஒரு விதமான வலி, ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வீக்கம், மிதமான காய்ச்சல், உடல் வலி, பதற்றம், ஒவ்வாமை, அரிப்பு, சொறி போன்றவையாக வெளிப்படலாம் என்றும் குறிப்பிடுகிறார் டாக்டர் மனோகர் அக்னானி.

ஆனால், சில விளைவுகள் தீவிரமானவையாக இருக்கக்கூடும் என்றும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு அதிக காய்ச்சல் அல்லது 'என்ஃபைலாக்ஸிஸ்' (கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள்) என்ற நிலையும் உருவாகலாம் என்றும் எச்சரிக்கிறார். இருப்பினும் இது தற்காலிகமானது என்றும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் அளவுக்கு இருக்காது என்று ஆறுதலளிக்கிறார். 

ஆனால், மிகத் தீவிரமான எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொண்ட நபரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்கிறார். அத்தகைய சந்தர்ப்பத்தில், உயிரிழப்போ வாழ்நாள் முழுமைக்கும் பாதிக்கக்கூடிய ஒரு சிக்கலோகூட ஏற்படலாம் என்று இவர் விளக்குகிறார்.

ஒவ்வொரு தடுப்பூசித் திட்டத்திலும் இதுபோன்ற சில பாதகமான விளைவுகள் காணப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக 5 முதல் 10 சதவிகிதம் பேர்வரை இதுபோன்ற எதிர்மறையான விளைவைப் பெறுவது இயல்புதான் என்று தெரிவிக்கிறார். =https://www.bbc.com/tamil/science-55717357
======================================================================================