அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

"ஒரு மசுரும் புரியல!!!"

பிறந்ததன் விளைவாகப் பிற உயிர்களை வதைத்துச் சிதைத்து உணவாக்கி வாழ்கிறோம்.

ஆசைப்பட்டபடியெல்லாம் வாழ்ந்து முடிப்பதற்குள், வகை வகையான உணர்ச்சிப் போராட்டங்களுக்கிடையே கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத உயிரினங்களின் தாக்குதலுக்கு உள்ளாகிச் சிதைகிறோம்.

பிறப்புக்கும் இறப்புக்குமான இடைப்பட்ட காலத்தில், ஆணும் பெண்ணுமாகச் சதையோடு சதை தேய்த்துச் சந்ததிகளை உருவாக்குகிறோம். எதனுடனோ எவருடனோ எல்லாமோ போராடி வதைபடுகிறோம். வாழ்நாள் முடிந்ததும் செத்துத் தொலைக்கிறோம்.

அப்புறம் என்ன ஆகிறோம்? 

ஒரு மயிரும் புரியவில்லை.

இந்தப் புரியாத புதிர் குறித்துத் தானும் சிந்தித்துப் பிறரையும் சிந்திக்கத் தூண்டாமல், ஒன்றுக்கும் உதவாத கடவுளைத் துதிபாடும் கிளிப்பிள்ளை மனிதர்களை நினைத்தால் மிஞ்சுவது வேதனை மட்டுமே!


                                                *                                 *                                  *
இப்பதிவை எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்த ‘ஔவை’யின் பாடலைக் கீழே பதிவு செய்கிறேன். இது நம்மவர் சிந்தனையை விரிவுபடுத்துவதாக அமையும் என்பது என் நம்பிக்கை.

‘வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமென்றால் போகா -இருந்தேங்கி 
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்’                                            [துஞ்சுதல் - இறத்தல்]   
======================================================================================