அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 10 ஏப்ரல், 2021

வெளியாகுமா நித்தி[எ]கலியுகக் கண்ணனின் 'ஜலக்கிரீடை'க் காணொலி?!?!

வெங்கடேசப் பெருமாள் போல, சங்கும் சக்கரமும் ஏந்தி, ஏராள நகைகளுடனும் கிரீடத்துடனும் புகைப்படம் வெளியிட்டிருக்கிறார் 'அருள்திரு' நித்தியானந்தா சுவாமிகள். வதனத்தில் கடலளவு கருணாமிர்தம் பொங்கி வழிய, "பக்தகோடிகளே, வாருங்கள் நம் கைலாசாவுக்கு" என்று அழைப்பும் விடுத்துள்ளார் தம் திருவடி தொழுவோருக்கு.

கைலாசா நாட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஆஸ்திரேலியாவிலிருந்து விமான சேவை தொடங்கவிருப்பதாகவும்,  இ-கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த 'அவதாரப் புருஷர்' அறிவித்துள்ளார்[ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளார்களாம். அவர்களில் அடியேனும் ஒருவன்! ஹி...ஹி...ஹி!]. சுவாமிகளின் முகநூல் பக்கத்திலிருந்து நகலெடுத்த படங்களும் வெளியாகியுள்ளன.

கைலாசாவில் ரிசர்வ் வங்கியின் பணியும் தொடங்கவுள்ளதாம். ஏற்கனவே நாணயங்கள் வெளியிட்டுள்ளார் சுவாமிகள்.

நாள்தோறும், காணொலியில் தம் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவதை வழக்கமாகக் கொண்ட இந்தக் கலியுகக் கருணாமூர்த்தி, கொஞ்சம் நாட்களுக்கு முன்பு முழுமுதல் கடவுளான சிவபெருமானாகக் காட்சியளிக்கும் அவர்தம் புகைப்படத்தைத் தம் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்போது[08.04.2021], ஏழுமலையானாக அருள்மழை பொழியும் படத்தையும் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, பக்தர்களை ஆனந்தப் பரவசத்தில் மூழ்கடித்துள்ளார்.


வெகு விரைவில், கலியுகக் கண்ணனாக, கவர்ச்சிக் கன்னியருடன் 'ஜலக்கிரீடை' செய்யும் கண்கொள்ளாக் காட்சிகளைக் காணொலியாகப் பகிர்ந்துகொள்வாரா ராமகிருஷ்ண பரமானந்த நித்தியானந்தா சுவாமிகள்?!

பகிர்வார்.

பார்த்துப் பார்த்துப் பார்த்துப் பரமானந்த சுகம் பெறலாம்.

அந்தப் புனித நன்னாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்! ஹி...ஹி...ஹி!

                                 *                              *                                   *                                  *

விடை தெரியாத கேள்வி:

சிறுமியர் தொடர்பான ஆபாசக் காணொலியைப் பதிவிறக்கம் செய்தால், செய்தவனை எங்கிருந்தாலும் ஓடிப்போய்க் கைது செய்கிறது இணையக் குற்றப் புலனாய்வுத் துறை.

இணையத் தொழில்நுட்பம் பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் இந்த 'வேடதாரி'யைக் கண்டுபிடித்துக் கைது செய்ய முடியவில்லையே, ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

======================================================================================