சனி, 17 ஏப்ரல், 2021

பகுத்தறிவாளர் 'விவேக்' மறைவு... கலங்கும் நெஞ்சங்களின் கண்ணீர் அஞ்சலி!

'திரைத்துறைக்கு மட்டுமல்ல பகுத்தறிவுத் துறைக்கும் விவேக் மறைவு பேரிழப்பாகும்' -சாலமன் பாப்பையா 

'சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் தம்பி விவேக்' -நடிகர் சத்தியராஜ்

'நடிகர் விவேக்கின் சமூகச் சீர்த்திருத்த விழிப்புணர்வு நகைச்சுவைப் பாணி என்பது திராவிட இயக்கக் கருத்துகளின் தொடர்ச்சியாக இருந்தது. அதனால்தான், கலைஞர் கருணாநிதி நடிகர் விவேக்கைச் சின்னக் கலைவாணர் என்று அழைத்து மகிழ்ந்தார்.' -https://tamil.indianexpress.com/

தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை நெஞ்சில் தேக்கி நகைச்சுவையாக அவற்றை வெளிப்படுத்தினார் நடிகர் விவேக்' -மறுமலர்ச்சி தி.மு.க.தலைவர் 'வைகோ'

'மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியதால் பெரியார் விருது பெற்றவர் விவேக்'  -கி.வீரமணி 

'அவர் நட்ட பல லட்சம் மரங்கள்கூட அவரை நினைத்து வாடும்' -நடிகர் நாசர்

'நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர் நடிகர் விவேக்' -தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

'சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்டவர் நண்பர் விவேக்' -நடிகர் பார்த்திபன்

'சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும் , செயற்பாட்டாளராகவும் விவேக் திகழ்ந்தார்' -டி.டி.வி.தினகரன்

'தனக்குச் செய்த சமூகத்துக்குத் தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர்' - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

'நடிப்பைத் தாண்டிய சமூக அக்கறை கொண்டவர். சுற்றுச்சூழல் ஆர்வலர்' -காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

'சமூகச் சேவைகளால், சமூகச் சீர்திருத்தக் கருத்துகளால் என்றும் மக்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் வசித்துகொண்டே இருப்பார்' -சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்

'தனது நகைச்சுவையால் சமுதாயச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றவர்' -https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=671559

'தான் பேசிய பகுத்தறிவைத் தூண்டும் வசனங்கள் மூலம் மக்களைச் சிந்திக்கத் தூண்டியவர் விவேக்' -தினத்தந்தி

'இன்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின் பேசிய அவர், "பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள்” என்று அறிவித்தார்' -ஊடகச் செய்தி

======================================================================================