அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

பெரியார் பெயர் மாற்றம்... 'சீண்டல்' தொடரும்!!!


நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்பது பெரும்பான்மைக் கருத்துக்கணிப்புகளின் வாயிலாக அறியலாகும் செய்தி.

இச்செய்தி, பெரியார் நெடுஞ்சாலைப் பெயர் மாற்றத்திற்குக் 'காரணமானவர்களை'ப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தேர்தல் மூலம் தி.மு.க. ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் முயற்சி ஏறத்தாழத் தோற்றுவிட்ட நிலையில், வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டு, அக்கட்சியை ஆள விடாமல் தடுப்பதற்கான அவர்களின் முதல் கட்ட நடவடிக்கையே இந்தப் பெயர் மாற்றம்[பெரியார் பெயர் அழிப்பு] ஆகும்.

தமிழர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் ஏமாளிகள். பெயர் மாற்றம் போன்ற 'சீண்டல்' வேலைகளைத் தொடர்ந்தால் அவர்கள் போராட்டக் களத்தில் இறங்குவார்கள்.

சீண்டிக்கொண்டே இருந்தால், மத்திய அரசை எதிர்த்து அடிக்கடி அவர்கள் போராட்டம் நடத்துவார்கள். அடிக்கடி நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, 'அமைதியை நிலைநாட்ட வேறு வழியில்லை' என்று சொல்லி, தி.மு.க. ஆட்சியைப் பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம்.

அந்த ஆறு மாத காலத்தில், தமிழருக்கான அடையாளங்களில் எதையெதையெல்லாம் அழிக்க முடியுமோ அதையதையெல்லாம் அழித்து முடித்து, அவர்களின் இன உணர்ச்சி, மொழிப்பற்று முதலானவற்றை முற்றிலுமாய் மழுங்கடிக்கும் வேலையைக் கச்சிதமாக 'அவர்கள்' செய்து முடிப்பார்கள் என்பதை நம்மவர்கள் மறந்துவிடவே கூடாது.

                                                *                        *                                *                      

#Oneindia Video Tamil Team Published : April 16, 2021, 10:00 Duration : 01:04 சென்னை: இரவில் மீண்டு(ம்) வந்தார் பெரியார்: மாற்றப்பட்டது கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு! சென்னை: இரவில் மீண்டு(ம்) வந்தார் பெரியார்: மாற்றப்பட்டது கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு!# -இது இன்று வெளியான செய்தி.

இச்செய்தி உண்மையாக இருப்பின், 'அவர்கள்' திருந்திவிட்டார்கள் என்னும் நம்பிக்கையில், தமிழர்கள் மீளாத் துயிலில் ஆழ்ந்துவிடக் கூடாது என்பதே நம் போன்றோர் செய்யும் எச்சரிக்கை!

https://tamil.oneindia.com/videos/sennai-iravil-meendu-m-vanthar-beriyar-marrappattathu-kirand-vesdan-dirang-rodu-dhnt-1495648.html

======================================================================================