அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 28 ஜூன், 2021

'டெல்டா பிளஸ்', வைரஸ்களின் 'தாதா'... உ.சு.அ.['WHO'] கடும் எச்சரிக்கை!!!

*'மக்களிடையே இதுவரை பரவிய கொரோனா வைரஸ் வகைகளில் 'டெல்டா' வகை உருமாறிய கொரோனாதான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.'

*'ஏனையத் தொற்றுகளைவிடவும் மோசமான இந்தத் தொற்றால். தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து அதிகம்! என்பதாகவும் அது எச்சரித்துள்ளது.' 

*கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது; இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாற்றம் அடைந்து இருக்கிறது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கு 'டெல்டா' என்று பெயரிடப்பட்டுள்ளது.' 

*இந்தியாவில் உருமாறிய 'டெல்டா' கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து 'டெல்டா பிளஸ்' வைரஸாக உருவெடுத்தது. இந்த டெல்டா வகை வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளது.'

*'உலக அளவில் சீனா, போலந்து, ஸ்விட்சர்லாந்து, ரஷ்யா, பிரிட்டன், போர்ச்சுகல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டெல்டா ப்ளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.'

*'இந்தியாவில் இதுவரை சுமார் 40 பேருக்கு[இந்த எண்ணிக்கை இப்போது அதிகரித்திருக்கக்கூடும்] இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டுள்ளது. கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு உள்ளது. கேரளாவில் 4 வயதுச் சிறுவன் உட்பட சில பேருக்குப் பாதிப்புக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.' 

ஆக, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை 'டெல்டா பிளஸ்' கடுமையாப் பாதிக்கும் என்பது அறியத்தக்கதாகும். 

====================================================================================

***மேற்கண்ட கொரோனா தொடர்பான அண்மைச் செய்திகளை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள். எனினும், 'நினைவூட்டல்' பொருட்டு இங்குத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.