எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 8 ஜூலை, 2021

அமேசான் கிண்டிலில் இது புதுசு!

அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ள, என்னுடைய '37'ஆவது  நூல் 'ஓ..... விஞ்ஞானிகளே!' 

நூலின் 08 கட்டுரைகளில் 'ஓ..... விஞ்ஞானிகளே!' முதலாவது; உலக அளவிலான அறிவியல் அறிஞர்களிடம் ஒரு சாமானியன் முன்வைக்கும் புதுமையானதொரு கோரிக்கையை உள்ளடக்கமாகக் கொண்டது.

எஞ்சிய 07 கட்டுரைகளும்கூட படைப்புத் தத்துவங்களின் பயன்பாட்டை இயல்பு வாழ்க்கையுடன் இணைத்து ஆராயும் அரிய முயற்சிதான்.

தத்துவம் என்றாலே, அது வாசகரை எளிதில் சலிப்படையச் செய்வது என்று எண்ணுவோரே நம்மில் மிகப் பலராவர். அவ்வெண்ணம் தவறானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எளிய நடையில் தொய்வில்லாமல் கருத்துகளைப் பதிவு செய்திட முயன்றிருக்கிறேன். 

நீங்கள் கிண்டிலின் சந்தாதாரராக இருப்பின், இந்நூலை இலவசமாக வாசிக்கலாம்.

நன்றி!

ஓ..... விஞ்ஞானிகளே! (Tamil Edition)
Free with Kindle Unlimited membership Learn More

சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!
Or ₹74 to buy
============================
செம்மொழி தமிழ் மட்டுமே.....

காணொலி:
https://youtu.be/teP104wjp2w
===========================
உதவி: 'Quora'