எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 6 ஜூலை, 2021

இணைய வகுப்பு- இங்கே இப்படி! அங்கே அப்படி!!

இணையப் பாடவகுப்பில் நம்ம ஊர் ஆசிரியர்[கள்] ஆபாசமாக நடந்துகொண்டது நாமறிந்த பழைய செய்தி.

இதற்கு நேர் எதிராக, வியட்நாமில்[Ho Chi Minh city of Vietnam], இணையம் வழியாகப் பாடம் கேட்டுக்கொண்டிருந்த மாணவர் ஒருவர், படு ஆபாசமாக நடந்துகொண்டார் என்பது புதிய செய்தி.

பாடம் கேட்டுக்கொண்டிருந்த அந்த மாணவர் திடீர் விரகதாபத்திற்கு உள்ளாகி, அருகிலிருந்த தன் தோழியுடன் அந்தரங்க உறவில் ஈடுபட்டிருக்கிறார். அது நேரடியாக ஒளி/ஒலிபரப்பு ஆகியுள்ளது.

அவரின் செயல் தவறானதுதான் என்றாலும், காணொலிக் கருவியை[கேமரா] அவர் அணைக்க மறந்ததுதான் மன்னிக்க இயலாத குற்றமாக அமைந்துவிட்டது[அந்த ஆன்லைன் செக்ஸ் வீடியோவில் ஒரு சிறு கிளிப் கடந்த வாரம் ஆன்லைனில் கசிந்தது என்பது செய்தி]. 

இதன் விளைவாக, பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர்[மாணவர்களும்தான்] கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்; “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நேரடியாக வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் வகுப்பில் இருக்கும்போது நீங்கள் உடலுறவு கொள்கிறீர்கள்” என்று சீற்றத்துடன் அவர் கத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டனவாம்.

பேராசிரியரின் கோபமான வார்த்தைகளைக் கேட்ட பிறகுதான், தனது தவற்றை உணர்ந்துக்கொண்ட மாணவர், உடனடியாக ஆடையால் உடலை மறைத்துக்கொண்டு, நொடிப் பொழுதுக்குள் கேமராவை அணைத்திருக்கிறார்.  இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் பேராசிரியரிடமும், தன் வகுப்புத் தோழர்களிடமும் அந்த மாணவர் மன்னிப்பு கோரியதாக வியட்நாமியச் செய்தித்தாள் 'லாவோ டோங்' தெரிவித்தது என்பதும் செய்தி[https://zeenews.india.com/tamil/social/bizarre-online-class-student-having-sex-during-online-class-goes-viral-366024  -04.07.2021.]

இந்தச் செய்தி, பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நடுவண் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்வொன்றை நினைவுபடுத்தியது.

தொலைக்காட்சித் திரையில் ரயில்களின் புறப்பாடு, வருகை தொடர்பான தகவல்களை அறிவிப்புச் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகமான காலக்கட்டம் அது.

தகவல் அறிவுப்புகளுக்கிடையே, சற்றும் எதிர்பாராத வகையில், ஒரு வாலிபர்(அங்கே வேலை பார்ப்பவர்)   சுயசுகம் அனுபவிக்கும் காட்சி திரையில் தெரியலாயிற்று. அதிர்ச்சியடைந்த பயணிகள் தொடர்புடைய அதிகாரிகளிடம் புகார் செய்ய, அந்த ஆபாச நிகழ்வு மறைக்கப்பட்டது. மேற்கண்டது போன்ற தவறுதான் இங்கேயும் நிகழ்ந்திருக்கிறது.

சுற்றுச் சூழலை மறந்து செய்யப்படும் இவ்வாறான தவறுகள் அரிதாகத்தான் நடைபெறுகின்றன என்றாலும், பெரியவர்கள் என்றில்லாமல் சிறுவர் சிறுமிகளையும் சென்றடைந்து மனத்தளவில் அவர்களுக்குப் பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் என்பது அறியத்தக்கது.

கட்டுக்கடங்காத இச்சைக்கு உள்ளாகும்போது, இச்சைக்குள்ளானவர் முற்றிலுமாய், தன்னை மறந்தும் சுற்றுச் சூழலை மறந்தும் இச்சையைத் தணிப்பதிலேயே கவனம் செலுத்துவார் என்பதற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கீழ்வரும் நிகழ்வும் ஓர் உதாரணம் ஆகும்.

புதுமணத் தம்பதியரான மகனும் மருமகளும் வெளியூர் செல்ல, பேருந்து நிலையம் செல்கிறார்கள்.

தனித்து விடப்பட்ட முதியவர், தொலைக்காட்சியில் பெண்ணின் ஆபாச நடனத்தை ரசித்தவாறு சுய இன்புறுதலில் ஈடுபடுகிறார். போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக வீடு திரும்பிய புதுமணத் தம்பதி, கதவு உட்பக்கம் தாழிடப்படாமல் வெறுமனே சாத்தப்பட்டிருந்த நிலையில், பெரியவர் இருந்த கோலம் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்; அவரைக் கடிந்துகொள்ளவும் செய்தார்கள்.

அன்றிரவே, தனக்கான அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார் பெரியவர்[மருமகள் வாயிலாக, நடந்த அசம்பாவிதம் அண்டை அயலாருக்குத் தெரிந்துவிட்டது].

இம்மாதிரி நிகழ்வுகள் வெகு அரிதானவைதான் என்றாலும் அதன் விளைவு பெரும் கேடு விளைப்பதாக அமைந்துவிடுகிறது.

ஆக, இணைய வகுப்புகள் என்றில்லை, கட்டுப்படுத்தவே இயலாத நிலையில் சிற்றின்பங்களில் ஈடுபடுவோர், அவர்கள் இருந்துகொண்டிருக்கும் சூழ்நிலை எவ்வாறானது என்பதை மிகக் கவனமாக ஆராய்ந்தறிவது மிக மிக மிக அவசியமாகும்.

இம்மாதிரியான நாம் அறிந்த செய்திகளை நம்மோடு தொடர்புடையவர்கள் மூலம் பரவச் செய்வது'சிறுசு'களுக்கு மட்டுமல்லாமல் 'பெருசு'களுக்கும் பயன்தருவதாக அமையும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.

====================================================================================