அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

95 அடி போதாது; 950 அடியில் பெரியாருக்குச் சிலை நிறுவுக!!!


#29-07-1944 அன்று கடலூரில் பெரியாரின் மீது ஒன்றைச் செருப்பு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. தன் மீது விழுந்த ஒற்றைச் செருப்பு தனக்கும் பயன்படாது; வீசியவருகும் பயன்பாடாது என்பதால், வந்த வழியில் திரும்பிச் சென்று முன்னதாக வீசப்பட்ட இன்னொரு செருப்பையும் எடுத்துவந்தார் பெரியார் என்பது பழைய செய்தி.

செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில்[28 ஆண்டுகளுக்குப் பிறகு] 1972இல்  கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கடலூர் மக்களால் பெரியாருக்குச் சிலை திறக்கப்பட்டது. கலைஞர் திறந்து வைத்த சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார் ஈ.வெ.ரா.பெரியார்.

உயிருடன் இருந்தபோது பெரியார் தனக்குத்தானே சிலை வைத்துக்கொண்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்கள் சிலர்[பெரியார் தனக்கு தானே சிலை வைத்துக்கொள்ளவில்லை. தொண்டர்களால் வைக்கப்பட்டது அது]. 

அக்கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில், "பிற்காலத்தில், ராமசாமினு ஒருத்தன் இருந்தான். அவன் பகுத்தறிவுப் பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருந்தான்னு பேசுவாங்க. அதுக்காகத்தான் இந்தச் சிலை" என்றார் பெரியார்#[https://youturn.in/articles/periyar-statue-in-cuddlore.html]

#சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் லட்சுமணசாமி, ஓய்வு பெற்ற சென்னை பிரதம நீதிபதி டாக்டர் ராஜாமன்னார், கர்மவீரர் காமராஜர் என்று பலருக்கும் உயிருடன் இருக்கும்போதே சிலை வைக்கப்பட்டது என விடுதலை நாளிதழ் செய்தி வெளியிட்டது.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பிலேயே பெரியாருக்குச் சிலை நிறுவப்பட உள்ளது. திருச்சியில் பெரியாருக்கு 135 அடியில் பிரமாண்ட சிலையை நிறுவ இருப்பது[தமிழ்நாடு அரசு அல்ல. தமிழ்நாடு அரசு அதற்கு அனுமதி மட்டுமே அளித்து இருக்கிறது].

அங்குசம் எனும் இணையதளத்தில், 'பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூறில், "பெரியார் உலகம்” என்ற பெயரில் பெரியாரின் 95 அடி உயரச் சிலை, 40 அடி பீடம், [அந்த வளாகத்தில்] குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியவையும் அமைக்கப்படுவதற்குத் தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையைத் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்' என்று செய்தி வெளியாகி இருக்கிறது#[https://youturn.in/factcheck/trichy-periyar-statue-100cr-govt.html].

இது குறித்து முழுமையாக விசாரித்தறியாமல், 'தினமலம்' நாளிதழ்[பெரியாருக்கு 135[95] அடி உயரச் சிலை நிறுவுவதை இது கிண்டல் செய்திருக்கிறது] போன்ற, பெரியார் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட விஷ ஜந்துக்கள், தமிழக அரசை மனம்போன போக்கில் கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருக்கிறதுகள்.

வெறும் கற்பனைக் கடவுள்களுக்குப் பல்லாயிரக் கணக்கில் சிலை வைத்துக் கோயில், கும்பாபிஷேகம், திருவிழா என்று கோடானுகோடி ரூபாயை வீணடித்துக்கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாதவர்கள், மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவதற்காகத் தன் இறுதி மூச்சுவரை அரும்பாடுபட்ட, பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்கு 95 அடி உயரச் சிலை வைப்பதைச் சகித்துக்கொள்ள இயலாமல், அடிவயிறு எரியப் பொருமுகிறார்கள்.

95 அடியென்ன, 950 அடியில்கூடப் பெரியாருக்குச் சிலை வைக்கலாம்.

சிலை வைப்பதோடு, ஊரூருக்குப் பெரியார் எழுதிய நூல்களும், அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளை விவரிக்கும் படைப்புகளும் அடங்கிய நூலகங்களை அரசு உருவாக்குதல் வேண்டும்.

பெரியாரின் உயரிய சிந்தனைகளை மக்கள் அறிந்துணர்ந்து பின்பற்றிட இவை வழிவகுக்கும் என்பது உறுதி.

====================================================================================