அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

வாழ்க நீதிபதிகள்! வெல்க நீதி!! வளர்க பகுத்தறிவு!!!


'ஏன் பிறந்தோம், அல்லது, பிறப்பிக்கப்பட்டோம்? மரணம் ஏன்? மரணத்திற்குப் பிறகு என்ன ஆகிறோம்?'

இவற்றிற்கும், இவை போன்ற கேள்விகளுக்கும் விடை தெரியாத நிலையில், மனத் தூய்மையுடன் அமைதியாகவும் மகிழ்வுடனும் வாழ்ந்து, பிறரும் பிற உயிர்களும் அவ்வாறே வாழ்ந்திட உதவி புரிந்து வாழ்க்கையை நிறைவு செய்வதே நம் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். 

இக்குறிக்கோள் நிறைவேற, கடவுள்[இருந்தால்], கோயில், கொண்டாட்டம், மதம்,  காமம், காதல், கத்திரிக்காய் என்றிவையும், இவை போல்வனவும் நமக்கு உறுதுணையாவது மிக அவசியம்.

இவையெல்லாம் நமக்காகத்தானே தவிர, இவற்றுக்காக நாம் அல்ல.

இதை உணரும் அறிவு நம்மில் பலருக்கு இல்லை. 

சென்னையைச் சேர்ந்த இல.கணபதி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் கடந்த 30ஆம் தேதி, தமிழக அரசு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் அனுதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறைந்தபட்சம் 5 பேரையாவது ஊர்வலத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

விசாரணையை நடத்திமுடித்த நீதிபதி அமர்வு, மத உரிமைகளைவிடவும் வாழ்வாதார உரிமை முக்கியமானது என்றும், கொரோனா காலத்தில் பொதுநலனைக் கருத்தில்கொண்டே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதைக் கருதி அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் ஐகோர்ட்டு தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.  https://www.dailythanthi.com/News/Topசெப்டம்பர்     - 08,  2021 13:18pm

                              *  *  *

பகுத்தறிவுச் சிந்தனையுடன் சீரிய தீர்ப்பு வழங்கிய நீதியரசர்களைப்  போற்றுவோம்; என்றென்றும் நீதி வென்றிட ஒருங்கிணைந்து பாடுபடுவோம்!

================================================================================