எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 25 செப்டம்பர், 2021

இது இயற்கை நிகழ்வா, இறைவனின் திருவிளையாடலா?!?!


இந்தப் பூச்சி நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதன் பெயர், 'தயிர்கடைப் பூச்சி'; 'கும்பிடு பூச்சி' என்றும் சொல்வார்கள்[ஆங்கிலத்தில் பிரேயிங் மேன்டிஸ் (Praying mantis). 

பெரும்பாலும் கூட்டமாகத் திரியாமல் தனியாக இரையைத் தேடி அலையும் குணம் கொண்டது இது. இது ஏனைய பூச்சிகளை உணவாக்கி வாழ்வது. 

பார்வைக்கு 'அப்பிராணி'யாகக் காட்சியளிக்கும் இந்த இனப் பெண் பூச்சி, பருவ வயதை அடைந்தவுடன், இனப்பெருக்கத்திற்காக ஆண் பூச்சியைத் தேடி அலையும். தனக்கேற்ற ஆண் கிடைத்தவுடன் அந்த ஆணிடம் மிகவும் சாதுவாகப் பழகும். தன் அழகால் அதற்குப் புணர்ச்சி வேட்கையைத் தூண்டும். இரண்டும் உடலுறவு கொள்ளும்.

உடலுறவு நிகழும்போதுதான் அந்தக் கொடூரமும் அரங்கேறுகிறது.

ஆண் பூச்சி பேரின்ப மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த அற்புதமான நேரத்தில், பெண் 'தயிர்கடைப் பூச்சி' தன் வாயை ஆணின் கழுத்தருகே கொண்டுசென்று, தனது கூரிய பற்களைப் பயன்படுத்தி ஆணின் தலையைக் கொய்துவிடும்; முழுமையாக உண்டுவிடும்.

கருவுற்று, வாரிசைப் பெற்றெடுக்கும்வரை இதற்கு உடலுறவு கொள்வதில் நாட்டம் இருப்பதில்லை.

மீண்டும் உடலுறவு வேட்கை தோன்றும்போது அடுத்தவொரு ஆண் தயிர்கடைப் பூச்சியைத் தேடிக்கொள்ளும். உடலுறவு முடிந்ததும் அந்த ஆண் பூச்சியின் கதியும் அதோகதிதான்.

இது, இந்தப் பூச்சி இனத்தைப் பொருத்தவரை ஓர் இயற்கை நிகழ்வு.

இந்த இயற்கை நிகழ்வுக்குள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிற ஒரு விசித்திரம் மறைந்திருக்கிறது. அது.....

தலை துண்டிக்கப்படுவதால், அந்தரங்க உறுப்பை வெளியேற்றுவதற்கு ஆணை பிறப்பிக்கும் அதன் மூளை செயலற்றுப்போகிறது. அதனால், அதன் உறுப்பு வெளியேற்றப்படாமலே இருக்கும். இதன் விளைவாக, பெண் பூச்சி நீண்ட நேர அந்தரங்க சுகத்தைப் பெறுகிறதாம்!

இந்தப் பெண் தயிர்கடைப் பூச்சிக்கு இப்படியொரு கொடூர குணம் வாய்த்தது இயற்கையானதொரு நிகழ்வுதான் என்றால் பக்தகோடிகள் ஏற்கமாட்டார்கள். அதற்கு அந்தக் குணத்தைத் தந்தருளியவர் கடவுளே என்பார்கள், அனைத்தையும் படைப்பவனும் இயக்குபவனும் அவனே என்பதால்.

உடன்படுவதைத் தவிர நம்மைப் போன்றவர்களுக்கு வேறு வழியில்லை. ஹி... ஹி... ஹி!!!


====================================================================================

மூலம்:🦗🐝

ரவீந்தர் 'பதில்'[https://ta.quora.com/ ]