அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மு.க.ஸ்டாலினுக்கு நெல்லைக் கண்ணன் சூட்டிய மணிமகுடம்!!!


வ.உ.சி.யின் 150ஆவது பிறந்தநாள் விழா இன்று (5ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வ.உ.சி.க்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடுதல் முதலான அந்த அறிவிப்புகளை, அனைத்துத் தமிழ் ஊடகங்களும் குறிப்பிடத்தக்க செய்தியாக அறிவித்துள்ளன.  இந்நிலையில்.....

மேற்கண்ட அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழறிஞர் நெல்லைக் கண்ணன்.

அதன் உள்ளடக்கம் பின்வருமாறு:

#சென்னை காந்தி மண்டபத்தில் அவர்[வ.உ.சி] செக்கு இழுந்த இடத்தில் அவருக்கு மார்பளவுச் சிலை; கோவையில் சிறையில் இருந்த இடத்தில் முழு உருவச் சிலை; தமிழ்நாட்டில் பல இடங்களில் வ.உ.சி.க்கு மரியாதை; ஒவ்வொரு வருடமும்  'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' என்ற பெயரிலே ஆண்டுதோறும் விருது; விருதுத் தொகையாக ரூ.5 லட்சம் தமிழனுக்குத் தருவது என்று ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

குறையே சொல்ல முடியாத அளவிற்கு ஸ்டாலின் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். இன்றுவரை யாரும் அவரை நோக்கிக் கை நீட்டிக் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஆட்சி நடத்துகிறவர் அவர். அந்த மிகப்பெரிய மனிதனுக்கு, அந்தச் செக்கிழுத்த செம்மலுக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையைச் செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். 

வயதில் இளையவர் என்றாலும் நான் அவரது பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன். 

இந்தப் பெருமையை இந்த நாட்டிற்காகத் தன்னையும் தன் குடும்பத்தையும் தன் சொத்துச் சுகங்களையும் இழந்து வாடிய ஒரு மிகப்பெரிய மனிதனுக்குத் தந்திருக்கின்ற இந்த முதலமைச்சர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன்#

மூத்த அரசியல்வாதியும், தமிழறிஞருமான நெல்லைக் கண்ணன் அவர்கள் மனம் நெகிழ்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் போற்றிப் புகழ்ந்திருக்கும் அதே வேளையில், 'இதுவே தி.மு.க.வின் கடைசிக் கால ஆட்சி'என்பதாகத் தமிழ்நாடு 'பாஜக' தலைவர் அண்ணாமலை கணித்திருக்கிறார்; அறிவித்திருக்கிறார்.

நெல்லைக் கண்ணன் அவர்கள் முதலமைச்சர் மு.க, ஸ்டாலினை வாழ்த்தியதற்கான காரணங்களைப் பட்டியலிட்டது போல், அண்ணாமலை அவர்களும், தி.மு.க.ஆட்சி[திராவிடக் கட்சி] முடிவுக்கு வருவதற்கான காரணங்களைச் சுட்டிக் காட்டியிருந்தால், தான் தேர்ந்த ஓர் அரசியல்வாதி என்பதை அடையாளப்படுத்தியதாக இருந்திருக்கும்.

ஏனோ செய்யத் தவறியிருக்கிறார் தமிழ்நாடு 'பாஜக' தலைவர்!

====================================================================================

நன்றி: தமிழறிஞர் நெல்லைக் கண்ணன் & நக்கீரன்

https://www.nakkheeran.in/24-by-7-news/politics/v-o-chidambaram-pillai-related-announcements-m-k-stalin-nellai-kannan   -Sunday, Sep 05 2021