அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 21 டிசம்பர், 2021

மதங்கள் குறித்து அன்று பெரியார் கேட்ட 'கிடுக்கிப்பிடி'க் கேள்விகள்!!!

பகுத்தறிவாளன்: மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டன?

ஆத்திகன்: கடவுளால் உண்டாக்கப்பட்டன.


கேள்வி[பகுத்தறிவாளன்]:

மதங்கள் எத்தனை?

பதில்[ஆத்திகன்]:

பல மதங்கள் உள்ளன.


கேள்வி: இந்துமதம் யாரால் ஏற்படுத்தப்பட்டது?

பதில்: கடவுளால்.


கேள்வி: என்ன ஆதாரம்?

பதில்: வேதங்கள் சொல்கின்றன..


கேள்வி: வேதங்கள் தோன்றியது எப்படி?

பதில்: கடவுளால் தோற்றுவிக்கப்பட்டன.


கேள்வி: இதற்குச் சாட்சியோ ஆதாரங்களோ உண்டா?

பதில்: இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பதே பாபம்.


கேள்வி: இப்படிச் சொல்லிச் சொல்லியே மக்களை மூடர்கள் ஆக்கிவிட்டீர்கள். போகட்டும். கிறித்துவ மதம் என்பது என்ன?

பதில்: ஏசுநாதரின் போதனைகளைச் சொல்வது.


கேள்வி: ஆதாரம்?

பதில்: பைபிள்.


கேள்வி: ஏசுநாதர் என்பவர் யார்?

பதில்: கடவுளின் குமாரர்.


கேள்வி: அப்படி என்று யார் சொன்னது?

பதில்: ஏசுவே சொல்லியிருக்கிறார்.


கேள்வி: அது அவரது வாக்குமூலம். இதை நிரூபிக்க இந்த வாக்குமூலம் போதுமா?

பதில்:ஏன் போதாது?


கேள்வி: இப்போது ஒருவன் உம்மிடம் வந்து, ‘நான்தான் கடவுள்” என்று சொன்னால் நம்புவீரா? இருக்கட்டும். முகமதிய மதம் என்றால் என்ன?

பதில்: முகமது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகளைக் கொண்டது.


கேள்வி: அதற்கு என்ன ஆதாரம்?

பதில்: குரான்.


கேள்வி: அது யாரால் சொல்லப்பட்டது?

பதில்: கடவுளால் முகமதுநபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.


கேள்வி: அப்படி என்று சொன்னது யார்?

பதில்: நபி அவர்கள் சொன்னார்கள்.


கேள்வி: அப்படி என்று யார் சொன்னார்?

பதில்: குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன் வேறு பல சாட்சியங்களும் இருக்கின்றன.


கேள்வி: வேறு பல சாட்சியங்கள் என்பவை எவை?

பதில்: அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்களின் வாக்கு.


கேள்வி: அவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரம்?

பதில்: எல்லாம் நம்பிக்கைதான்.

[உரையாடல் தொடர்கிறது..........]

==========================================================================ஆதார நூல்: ‘புத்தரும் தந்தை பெரியாரும்’, கண்மணி பப்ளிகேஷன்ஸ், 4, இந்துக் காலனி, முதல் மெயின் தெரு, உள்ளகரம், சென்னை - 600 091; முதல் பதிப்பு: செப்டம்பர் 2000.

நூலாசிரியர்; தந்தை பெரியார்.

*** ‘குடியரசு’[20.03.1938] இதழில், கடவுள் குறித்தும் மதங்கள் பற்றியும் பெரியார் எழுப்பிய கேள்விகளில்[உரையாடல் மூலம்] சிலவற்றின் தொகுப்பு இப்பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக