அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 29 ஜனவரி, 2022

'ஆபாசக் காணொலிகள்'... அரசின் ஆணையும் இணையக் கொள்ளையரும்!!

இணைய வரவால் மக்கள் ஏராள நன்மைகளைப் பெறும் அதே வேளையில், அது வெகு தாராளமாக வாரி வழங்கும் ஆபாசப் படங்களும் 'காணொலி'களும் பலவிதக் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக அமைகின்றன என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களை வருத்தும் செய்தியாகும்.

படம் எடுப்பவர்களும், உதவியாளர்களும், படங்களை விற்றோ விநியோகித்தோ பணம் பண்ணுபவர்களும், நண்பர்களுடன் பகிர்பவர்களும், பதிவிறக்கம் செய்து சேமித்து வைப்பவர்களும் தண்டனைக்குரிய குற்றவாளிகள் என்று மைய அரசு சில ஆண்டுகளுக்கு[2017?] முன்பே அறிவித்தது ஊடகங்களில் வெளியான தகவல்.

அவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 

இங்கே குறிப்பிடத்தக்க ஒரு சோகம்[?] 'பலான படங்களைப் பார்ப்பவர்களும் தண்டிக்கப்படுவார்கள்' என்பது ஒரு செய்தியாக்கப்பட்டதே.

பாலுணர்வு உந்துதலுக்கான வடிகாலாக எண்ணிப் பலான படங்கள் பார்ப்பதை வழக்கப்படுத்தியவர்கள் உள்ளனர். அவர்களின் நிலை கவலைக்குரியது என்று கருத்துத் தெரிவித்த ஊடகக்காரர்கள், காவல்துறை அதிகாரிகளிடம் உரையாடி, விளக்கம் கேட்டு அதைச் செய்தியாகவும் வெளியிட்டார்கள்.

அண்மைக் காலங்களில், பலான காணொலிப் பயனாளர்களின் கணினிகளுக்கு, அரசாங்கமே அனுப்பியது போன்ற போலியான எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பி அவர்களிடம் பணம் பறிக்கும் செயலில் சில கணினி நுட்பம் தெரிந்த நபர்கள் ஈடுபடுகிறார்களாம்https://youtu.be/d2fgD0jL3P4?t=44. 'இவர்களிடம் ஏமாற வேண்டாம்' என்று கணினிப் பயனர்களை எச்சரிக்கும் ஒரு காணொலி இன்று என் கண்ணில் பட்டது.

அதைப் பகிர்வது கணினியாளர்கள் பலருக்கும் பயனுடையதாக அமையும் என்பது என் நம்பிக்கை.

இதனோடு தொடர்புடைய பழையதொரு காணொலி[காவல்துறை அதிகாரியின் பேட்டி]க்கான இணைப்பையும் தந்துள்ளேன்.

வருகைக்கு நன்றி.


https://youtu.be/Xwek2yWjZEM  -காவல்துறை அதிகாரியின் பேட்டி