அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

'ஒன்னு'க்கு இருந்ததால் அடி உதை! 'ரெண்டு'க்கு இருந்திருந்தால்...?!

#மத்தியப்பிரதேசத்தின் 'ராட்லம்' மாவட்டத்தில், பசு மாட்டின் முன்னால் ஒரு நபர் சிறுநீர் கழித்தாராம். அதைக் கண்ட மற்றொரு நபர் வாய்க்குவந்தபடியெல்லாம் முதலாமவரைத் திட்டியதோடு, 'அடி உதை' என்று தாக்குதலும் நடத்தினாராம். இது, சில மணி நேரங்களுக்கு முன்னரான 'தினத்தந்தி'ச் செய்தி# என்று செய்தி வெளியிட்டிருக்கிறது 'bbc' [https://www.bbc.com/tamil/india-60186972]

தொடரும் செய்தி:

#அந்த நபர் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கோரியும், தாக்குதல் நடத்தியவர் நிறுத்தவில்லை. 

இதுதொடர்பான வீடியோ[அடி உதை, கட்டியணைத்தல் கடத்தல்னு நாட்டில் எது நடந்தாலும் சுட்டெடுத்து, சுடச்சுட ஊடகங்களுக்குச் செய்தி அனுப்புறதுக்கென்றே கேமராவும் கையுமா அலையுறானுங்கய்யா]  சமூக வலைத்தளங்களில் பரவியது. 

அதைத் தொடர்ந்து, தாக்கப்பட்டவர் யார் என்று காவல்துறையினர் தேடினர். அதில் ஒன்னுக்கு இருந்து உதை வாங்கிய நபர் பெயர் 'சைபுதீன் பாட்லிவாலா' என்று தெரியவந்தது. அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 'வீரேந்திர ரதோட்' என்பவரைக் கைது செய்திருக்கிறார்கள்#

பசுவுக்கு எதிரே ஒன்னுக்கு இருந்ததுக்கா அடிப்பாங்க? 'அவரு பசு பார்க்கிறமாதிரி குஞ்சை['குஞ்சு' என்னும் சொல் தலைமயிரையும் குறிக்கும்]க் காட்டிகிட்டு ஒன்னுக்கு இருந்தார். இந்த அசிங்கத்தைப் பார்க்க விரும்பாத பசு வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டது. இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் அந்த மற்றொரு நபர் இவரைத் தாக்கினார்' என்று ஒரு 'தினப் புளுகு' பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது என்பது செவிவழிச் செய்தி.

அது உண்மையோ பொய்யோ, சிறுநீர் கழித்தவரை மற்றொருவர் தாக்கினார் என்பது உண்மைச் செய்திதான்.

முன்பெல்லாம், மாட்டுக்கறி தின்பவர்களைத் தாக்கினார்கள் மத வெறியர்கள். ஆட்சியாளர்களால் உரிய முறையில் தண்டிக்கப்படாததால், இப்போது சிறுநீர் கழிப்பவர்களைத் தாக்கும் அளவுக்குத் துணிந்திருக்கிறார்கள்.

அடுத்ததாக, சைபுதீன் போன்றவர்களின் நிழல் பசுவின் மீது பட்டாலே தாக்குதல் நடத்துவார்களோ?

பசு என்னும் ஒரு பிராணியைத் தாங்கள் வழிபடும் கடவுளின் வாகனமாக்கி யாரோ எப்போதோ எழுதிவைத்த கதையும், அது உண்மை என்று பின்னர் வந்தவர்கள் தொடர்ந்து செய்த பரப்புரையும்தான், இம்மாதிரியான மூடத்தனங்களை அழிந்துவிடாமல் பாதுகாக்கின்றன எனலாம்.

பசு மாடுகள் மனிதருக்குப் பால் மட்டுமே கொடுக்கின்றன. ஆடுகளும் கோழிகளும் இன்னும் சில உயிரினங்களும் அவர்களுக்குத் தம் முழு உடலையே உணவாக்கும் தியாகத்தைச் செய்கின்றன[பசு இறைச்சியை உண்ணாதவர்கள் இன்றும் கணிசமாக உள்ளனர்].

அவற்றையெல்லாம் புறக்கணித்து, பசுக்களை மட்டும் புனிதமானவை என்று இவர்கள் போற்றுவது எவ்வாறு என்று புரியவில்லை.

'புனிதம்' குறித்துப் புரியும்படியாக விவரித்துச் சொல்லி, இவர்களைத் திருத்துவதற்குச் சம்பந்தப்பட்ட மதவாதிகளோ ஆட்சியாளர்களோ தயாராக இல்லை என்பது மிகவும் கசப்பான உண்மையாகும்! 

==========================================================================